Wednesday, June 15, 2016

அனுமனை உபாசனை செய்து சித்தர்கள்

அனுமனை உபாசனை செய்து சித்தர்கள்
அனுமாரின் பெருமையை முழுமையாக
உணர்ந்தவர்கள், அவரையன்றி வேறொருவரை
வணங்கிட மாட்டார்கள். அத்தனை
சிறப்புகளைக் கொண்ட அனுமனைப் பற்றி
சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில்
உயர்வாய் குறிப்பிட்டிருக்கின்றனர்.
அனுமனை
உபாசனை செய்து சித்தர்கள் விண்ணில்
பறந்தார்கள். சிரஞ்சிவித்வம் (மரணமில்லா
வாழ்வு) பெற்ற அனுமாரின் மந்திரத்தையும்
செபம் செய்பவர்களுக்கு அனேகவிதமான
சித்துக்கள் கிட்டும் என்றும் குறிப்பிட்டிருக
்கின்றனர்.
அகத்தியர், யூகிமுனி, கொங்கணர், கோரக்கர்
போன்ற சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின்
ஊடே அனுமனைப் பற்றிய பல தகவல்களை
மறைத்துக் கூறியுள்ளனர்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த அனுமனின் மூல
மந்திரத்தினை, இந்த புத்தாண்டு நாளில்
பகிர்வது மிகவும் பொருத்தமாயிருக்கும் என
கருதுகிறேன். இந்த மூல மந்திரம் கோரக்கர்
அருளிய “நமனாசத் திறவுகோல்” எனும்
நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
அனுமந்தர் வசிய மந்திரம்
-------------------------
ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா
ஆங்கார அனுமந்தா
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா
அரிராம தூதா
அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக
வருக
வசி வசி சுவாகா.
இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து
துளசி மாலை
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48
நாட்களில் லட்சம்
உரு செபிக்க சித்தியாகும்.
செபிக்கும் முறை
மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில்
அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி
அறையில் படுக்கவேண்டும்
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது
அவர்கள் ஒட்டாமலும்
செபிக்கவேண்டும்.பெண்கள்
சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை
போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.
மந்திரம் செபிக்க தொடங்கியதும் இடையில்
நிறுத்தக்கூடாது நிறுத்தினால் பல
துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை
கவனத்தில் கொள்ளவும்.
இம்மந்திரத்தின் பலன்
இம்மந்திரத்தை முறையாக செபித்தவருக்கு
எதிரிகாளால் எந்த துன்பமும் ஏற்படாது.சகல
காரியமும் சித்தியாகும்.
அனுமந்த உபாசகரை கண்டாலே பேய் பிசாசு
பில்லி சூனியம்
சகலமும் மிரண்டு ஓடிவிடும் அனுமந்த
உபாசகரை எதிர்த்தவன்
பல துன்பங்களுக்கு ஆளாகி தொலைந்து
போவான்.
அண்டிடுவாய் அனுமாரின் மூலமந்திரம
---------------------------------------

ஆதார அனவரத ஓம். ரா. ஜ. மூர்த்த
விண்டுணு வாய்வு புத்திரா. ஹா. ரீம்.
அனுமந்தாய
வீக்ஷண்ய பக்ஷ ராஜசிரஞ்சீவி வாமஸ்யா
கண்டு ஸ்ரீம். உமாபதிங். உங். ருங். லுங் சுங்
ஆம். அம். உம். லா. லீ லூ. லே. லம். ஸம்
பண்டு மம. ஜீவ. ரெக்ஷ தரத் மான்மியம்
தேவ். மாவ் பாத தெரிசய அனுமந்த சரணாய
நமஸ்து.
அனுமார் மூல மந்திரம்..
-----------------------
ஓம் ராஜ மூர்த்த வாயுபுத்ரா. ஹா. ரீம்
அனுமந்தாயா. வீக்ஷண்ய பக்ஷராஜா
சிரஞ்சீவி வாமஸ்யா ஸ்ரீம் உமாபதிஸ்
உங். ருங். லுங். சுங். ஆம். அம். உம்.
லா. லீ. லூ. லே. லம். ஸம். மம. ஜீவ
ரெக்ஷதரத் மான்மியம்
தேவ். மாவ் பாததெரிசய. அனுமந்த சரணாய
நமஸ்து
இந்த மூல மந்திரத்தை தினமும் செபித்து வர
நலமும், வளமும் நிறையும்.
பில்லி, சூனியம், ஏவல் நம்மை தாக்காமல்
இருக்க அகத்தியர் கூறும் மந்திரம்:
:
:
: “பாரப்பா அனுமந்தன் வசியக் கட்டு
பகன்றிடுவேன் பதறாது உற்று நோக்கு
யாரப்பா அறிவார் இவரின் கூத்து
ஆணவத்தை வென்றவர்கள் அறிவாரப்பா
கூறப்பா ஓம் ஹரி ஆதி யென்று
குற்றமில்லா நாராயணா மேலும்
சேரப்பா அகிலாண்ட நாயகா வென்று
சொல்லிடுவாய் நமோ நமோ வென்றே
என்றுமே அனுதினமும் ஓதுமனுமந்தா
லெங்காபுரி ராவண சம்மாரா
சென்றுமே சஞ்சீவி ராயா மேலும்
சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா
வென்று நீ படித்து படித்து வரும்
விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும்
கொன்றுமே பிரம ராஷசிகளைப் பிடி பிடி
குலுங்க அடி அடி கட்டுக் கட்டே
கட்டிப் பின் வெட்டு வெட்டுக்
கதற கொட்டு கொட்டு நீ
முட்டி நீ தாக்கு தாக்கு ஓம்
மேலும் ஆம் மிளைய வனுமந்தா
கட்டி வா வா சுவா ஹா கூறு நீயும்
கட்டிய மந்திரந் தன்னை மைந்தா
மட்டில்லா பஞ்ச முறை சொல்லி பின்னே
மயங்காமல் நீறேடுத்து தூவு தூவே
தூவினால் திக்கெல்லாம் கட்டலாச்சு
துப்பரவாய் செய்வினையும் நீங்கலாச்சு
குறிப்புடனே யேதிராவார் எது தாழ்வே
பாவி தானாக்கால் யேது மேன்மை"
-;அகத்தியர்
சிவ சிவ சிவ சிவ நமசிவாய......

No comments:

Post a Comment