Wednesday, June 15, 2016

அனுமனை உபாசனை செய்து சித்தர்கள்

அனுமனை உபாசனை செய்து சித்தர்கள்
அனுமாரின் பெருமையை முழுமையாக
உணர்ந்தவர்கள், அவரையன்றி வேறொருவரை
வணங்கிட மாட்டார்கள். அத்தனை
சிறப்புகளைக் கொண்ட அனுமனைப் பற்றி
சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில்
உயர்வாய் குறிப்பிட்டிருக்கின்றனர்.
அனுமனை
உபாசனை செய்து சித்தர்கள் விண்ணில்
பறந்தார்கள். சிரஞ்சிவித்வம் (மரணமில்லா
வாழ்வு) பெற்ற அனுமாரின் மந்திரத்தையும்
செபம் செய்பவர்களுக்கு அனேகவிதமான
சித்துக்கள் கிட்டும் என்றும் குறிப்பிட்டிருக
்கின்றனர்.
அகத்தியர், யூகிமுனி, கொங்கணர், கோரக்கர்
போன்ற சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின்
ஊடே அனுமனைப் பற்றிய பல தகவல்களை
மறைத்துக் கூறியுள்ளனர்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த அனுமனின் மூல
மந்திரத்தினை, இந்த புத்தாண்டு நாளில்
பகிர்வது மிகவும் பொருத்தமாயிருக்கும் என
கருதுகிறேன். இந்த மூல மந்திரம் கோரக்கர்
அருளிய “நமனாசத் திறவுகோல்” எனும்
நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
அனுமந்தர் வசிய மந்திரம்
-------------------------
ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா
ஆங்கார அனுமந்தா
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா
அரிராம தூதா
அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக
வருக
வசி வசி சுவாகா.
இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து
துளசி மாலை
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48
நாட்களில் லட்சம்
உரு செபிக்க சித்தியாகும்.
செபிக்கும் முறை
மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில்
அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி
அறையில் படுக்கவேண்டும்
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது
அவர்கள் ஒட்டாமலும்
செபிக்கவேண்டும்.பெண்கள்
சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை
போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.
மந்திரம் செபிக்க தொடங்கியதும் இடையில்
நிறுத்தக்கூடாது நிறுத்தினால் பல
துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை
கவனத்தில் கொள்ளவும்.
இம்மந்திரத்தின் பலன்
இம்மந்திரத்தை முறையாக செபித்தவருக்கு
எதிரிகாளால் எந்த துன்பமும் ஏற்படாது.சகல
காரியமும் சித்தியாகும்.
அனுமந்த உபாசகரை கண்டாலே பேய் பிசாசு
பில்லி சூனியம்
சகலமும் மிரண்டு ஓடிவிடும் அனுமந்த
உபாசகரை எதிர்த்தவன்
பல துன்பங்களுக்கு ஆளாகி தொலைந்து
போவான்.
அண்டிடுவாய் அனுமாரின் மூலமந்திரம
---------------------------------------

ஆதார அனவரத ஓம். ரா. ஜ. மூர்த்த
விண்டுணு வாய்வு புத்திரா. ஹா. ரீம்.
அனுமந்தாய
வீக்ஷண்ய பக்ஷ ராஜசிரஞ்சீவி வாமஸ்யா
கண்டு ஸ்ரீம். உமாபதிங். உங். ருங். லுங் சுங்
ஆம். அம். உம். லா. லீ லூ. லே. லம். ஸம்
பண்டு மம. ஜீவ. ரெக்ஷ தரத் மான்மியம்
தேவ். மாவ் பாத தெரிசய அனுமந்த சரணாய
நமஸ்து.
அனுமார் மூல மந்திரம்..
-----------------------
ஓம் ராஜ மூர்த்த வாயுபுத்ரா. ஹா. ரீம்
அனுமந்தாயா. வீக்ஷண்ய பக்ஷராஜா
சிரஞ்சீவி வாமஸ்யா ஸ்ரீம் உமாபதிஸ்
உங். ருங். லுங். சுங். ஆம். அம். உம்.
லா. லீ. லூ. லே. லம். ஸம். மம. ஜீவ
ரெக்ஷதரத் மான்மியம்
தேவ். மாவ் பாததெரிசய. அனுமந்த சரணாய
நமஸ்து
இந்த மூல மந்திரத்தை தினமும் செபித்து வர
நலமும், வளமும் நிறையும்.
பில்லி, சூனியம், ஏவல் நம்மை தாக்காமல்
இருக்க அகத்தியர் கூறும் மந்திரம்:
:
:
: “பாரப்பா அனுமந்தன் வசியக் கட்டு
பகன்றிடுவேன் பதறாது உற்று நோக்கு
யாரப்பா அறிவார் இவரின் கூத்து
ஆணவத்தை வென்றவர்கள் அறிவாரப்பா
கூறப்பா ஓம் ஹரி ஆதி யென்று
குற்றமில்லா நாராயணா மேலும்
சேரப்பா அகிலாண்ட நாயகா வென்று
சொல்லிடுவாய் நமோ நமோ வென்றே
என்றுமே அனுதினமும் ஓதுமனுமந்தா
லெங்காபுரி ராவண சம்மாரா
சென்றுமே சஞ்சீவி ராயா மேலும்
சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா
வென்று நீ படித்து படித்து வரும்
விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும்
கொன்றுமே பிரம ராஷசிகளைப் பிடி பிடி
குலுங்க அடி அடி கட்டுக் கட்டே
கட்டிப் பின் வெட்டு வெட்டுக்
கதற கொட்டு கொட்டு நீ
முட்டி நீ தாக்கு தாக்கு ஓம்
மேலும் ஆம் மிளைய வனுமந்தா
கட்டி வா வா சுவா ஹா கூறு நீயும்
கட்டிய மந்திரந் தன்னை மைந்தா
மட்டில்லா பஞ்ச முறை சொல்லி பின்னே
மயங்காமல் நீறேடுத்து தூவு தூவே
தூவினால் திக்கெல்லாம் கட்டலாச்சு
துப்பரவாய் செய்வினையும் நீங்கலாச்சு
குறிப்புடனே யேதிராவார் எது தாழ்வே
பாவி தானாக்கால் யேது மேன்மை"
-;அகத்தியர்
சிவ சிவ சிவ சிவ நமசிவாய......

ஐயா சதுரகிரி புக் செல்லர்(புத்தக விற்பனையாளர்) திரு.மனோகர்

ஐயா சதுரகிரி புக் செல்லர்(புத்தக விற்பனையாளர்) திரு.மனோகர்அவர்கள் மிக அரிதான சித்தர் நூல்களையும்,மிகப்பழமையான சித்தமருத்துவ நூல்களை மட்டும் விற்பதை ஆன்மீக சேவையாக செய்து வருகிறார்.ஐயாவை ஒருமுறை சந்திக்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை,இறைவன் அருள் புரிய வேண்டும்.
Sathuragiri Book Seller Manohar
வரிசை எண்: L01-001 "தமிழ்ச் சித்தர் மரபு"
ஓம் சிவாயநம....
சிவனடியார்கள், சித்தர்கள் வழி நடப்பவர்கள், சித்தராக ஆகிட முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள், நமது முன்னோர்களான பதினெட்டுச் சித்தர்களைப் பற்றி அறிவியல் பூர்வமாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் படித்தே ஆக வேண்டிய....
இந்த "தமிழ்ச் சித்தர் மரபு" புத்தகத்தின் விலை, வெறும் இருநூறு ( 200/- ) ரூபாய் மட்டுமே....
கொரியர் செலவுடன் சேர்த்து வெறும் இருநூற்றைம்பது ( 250/- ) ரூபாய் மட்டுமே....
வேண்டுவோர் உடன் தொடர்பு கொள்ளவும்....
மனோகர்....94434-12387
வரிசை எண்: L01-002 "சித்தர்களின் மூலிகை விரிவகராதி"
சித்த மருத்துவத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய இந்த, "சித்தர்களின் மூலிகை விரிவகராதி" விலை, வெறும் நூற்றைம்பது ( 150/- ) ரூபாய் மட்டுமே.... கொரியர் செலவுடன் சேர்த்து வெறும் இருநூறு ( 200/- ) ரூபாய் மட்டுமே....
மேற்கண்ட இரண்டு புத்தகங்களும் கொரியர் செலவுடன் சேர்த்து வெறும் நானூறு ( 400/- ) ரூபாய் மட்டுமே....
வேண்டுவோர் உடன் தொடர்பு கொள்ளவும்....
மனோகர்....94434-12387....
facebookல் இருப்பவர்கள், "RARE BOOKS" எனும் பக்கத்தைப் பார்க்கவும்....
இன்றைய புது வரவுப் புத்தகங்கள்....
1. பதார்த்த குண சிந்தாமணி....ரூ.150/-
2. அகஸ்தியர் 12000. ஒருசெட்....ரூ. 375/-
3. அகஸ்தியர் வாத சௌமியம் 1200....ரூ.125/-
4. அகஸ்தியர் இழக்க சௌமிய சாகரம்..(1....ரூ. 2௦௦/-.
5. அகஸ்தியர் இழக்க சௌமிய சாகரம்..(2)....ரூ. 6௦/-
6. போகர் 7000. ஒரு செட்....ரூ. 525/-
7. ஒட்டியம் சல்லியம்....ரூ. 35/-
8. கோரக்கர் சந்திர ரேகை....ரூ. 75/-
9. கோரக்கர் மலை வாகடம....ரூ. 6௦/-
10. உயிர் காக்கும் சித்த மருத்துவம்....ரூ. 300/-
11. விஷ வைத்திய ஆருட நூல்கள்....ரூ. 150/-
12. நந்தீசர் அகால மரண நூல்....ரூ. 50/-
13. யுனானி தாது விருத்தி போதினி....ரூ. 350/-
14. சித்தர்கள் ரசவாதக் கலை....ரூ.150/-
15. இரசவாத சிந்தாமணி....ரூ.175/-
16. இரசவாத மஞ்சரி....ரூ. 45/-
17. அனுபவ நாடி ஞான போதினி....ரூ. 30/-
18. முப்பு எனும் கற்ப மருந்து....ரூ.
19. ஞான சர நூல்....ரூ. 50/-
20. சித்த மருத்துவம் கேள்வி-பதில் களஞ்சியம்....ரூ. 250/-
21.தெய்வீக ரசமணி....ரூ. 30/-
22.சித்தமருத்துவ மூலிகை விரிவகராதி....ரூ. 150/-
வேண்டுவோர் உடன் தொடர்பு கொள்ளவும்....
மனோகர்.... 94434-12387

Tuesday, June 14, 2016

பெண்மாயை தீர ,ஆன்மீகத்தில் உயர்வு உண்டாக அகஸ்தியர் கூறும் ரகசியம் !!!

மூலாதாரத்தில் மனம் வைத்து
"ஓம் அங் உங் அவ்வும் உவ்வும் ஸ்ரீம் சிவாய கங் கணபதயே நமா "
என்று 1008 உரு 48 நாட்கள் ஜெபித்து வர மூலாதாரத்தில் ஒளி உண்டாகும். அதன் பலனாக பெண்மாய்கையான காமம் எந்நாளும் தோன்றாது ,யோக உயர்வுக்கும் வழிவகுக்கும் என்று அகஸ்தியர் பூஜாவிதி 200 என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேன்சர் (Cancer) நோய்க்கு எளிய மருந்து ரெடி !

கேன்சர் (Cancer) நோய்க்கு எளிய மருந்து ரெடி !
மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில் மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் , தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன் பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விடயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம் அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.
எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கு முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு வகையான பூஞ்சை காளான் நோயாகும்.
சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது. அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை. இதன் பின் தான் இதற்கான மருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது, அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார். இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.
வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்
விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்
பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும்
பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்
நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி
நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால்
உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்
பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !
– அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17
கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான் என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார். இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை என்ற செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது. நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம். அதன் பின் இந்த உப்பை நன்றாக பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார், நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம். அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார், இல்லை என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம். இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) ) தான் என்றார். நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம் உடனடியாக அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறியதோடு இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்பிசத்த்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்தவும் இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள் என்றார் அவர்.
அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது. 2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார். இதன் முகவரிhttp://www.curenaturalicancro.com/en/
பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார். இதுவரை கேன்சர் தொடர்பான ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.
ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம் இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை சென்றடைந்துள்ளது.
மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில் நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில் இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும். முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை கருதி சில நேரங்களில் அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1
நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.
இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.
நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம். எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம். வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம். சித்தர்களின் பல அரிய மருத்துவ விடயங்களை இயற்கை உணவு உலகம் பாகம் 2 புத்தகத்தில் வெளியீடலாம் என்று இருந்தோம் ஆனால் இயற்கை உணவு உலகம் பாகம் 1 புத்தகம் எதிர்பார்த்த அளவு மக்களிடையே சென்றடையாத காரணத்தினால் இயற்கை உணவு உலகம் பாகம் 2 வெளியீடுவதை தவிர்த்துள்ளோம். காலமும் குருநாதரின் ஆசியும் இருந்தால் வெளிவரலாம். இயற்கை உணவு உலகம் பாகம் 1 பற்றிய விபரங்கள் அறிந்து கொள்ள இங்கு சொடுக்கவும்.
பப்ளிகேசன் இணையதள முகவரி : http://www.kandasamypublication.com/
Ref:https://www.facebook.com/drbaskarchannapatna/posts/1269271246423874
Dr Tullio Simoncini Cancer Therapy. Dr. Simoncini is an oncologist who treats cancer as fungus and has cured many cancer patients
CURENATURALICANCRO.COM