Saturday, October 31, 2015

நோய் ஒன்றே, வழியும் ஒன்றே !!!

இன்றைய உலகில் மனிதனுக்கு ஏறத்தாழ ஐந்தாயிரம் நோய்கள் இருப்பதாக, மருத்துவ உலகம் பட்டியலிட்டு உள்ளது. நாளுக்கு நாள் உலகில் மருத்துவ முறைகள் அதிகரித்தும், மருந்துகள் அதிகரித்தும், மருத்துவர்கள் அதிகரித்தும், மருத்துவமனைகள் அதிகரித்தும், நோய்களின் பட்டியல் மட்டும் குறைவில்லை. மாறாக, நோய்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. எடுத்துக்காட்டாக, முன்பெல்லாம் காய்ச்சல் என்று ஒரே ஒரு காய்ச்சல் நோய்தான் இருந்தது. இன்றைய நாளில், டைபாடு காய்ச்சல், மூளைக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், எபோலோ காய்ச்சல் என காய்ச்சல்களின் பட்டியல் நீள்கிறது.
ஆனால் இயற்கையில் நோய் ஒன்றுதான். அதற்கான தீர்வும் ஒன்றுதான். நோய் பலப் பல அல்ல. தீர்வும் பலப் பல அல்ல. மருத்துவ உலகம் தான் நோய் பற்பல, அதன் தீர்வுயும் பற்பல என இயற்கைக்கு மாறாகக் கூறி, மனிதரைத் திசைத் திருப்புகிறது. மனிதரும் திசை மாறிய பறவை மாதிரி, திண்டாடுகின்றனர்.. உதாரணமாக, ஒரு பலவீனமான இருசக்கர மிதிவண்டி டியூபில் காற்றடித்தால், அந்த டியூபின் எந்தப்பக்கம் பலவீனமாக உள்ளதோ, அந்தப் பக்கம் புடைக்கும். ஆனால் டியூபில் பஞ்சர் இல்லை, காற்றும் வெளியேறவில்லை. இதுபோல், உலக மனிதர் அனைவரும் தானியத்தைத் தான் சமைத்துப் பிரதான உணவாக உண்டு வருகின்றனர். அரிசி, கோதுமை, கம்பு, ராகி மற்றும் இதர சிறுதானிய உணவுடன், துணை உணவாகக் காய்கறி, கீரை, மற்றும் மீன், கோழி, இறைச்சி, முட்டை, பால், பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் முதலியவற்றையும் மசாலாப் பொருட்கள் சேர்த்து சமைத்து உண்டு வருகின்றனர். இத்தகைய உணவுகள் எல்லாம் கழிவு உணவுகள். தூய்மை இல்லாது, அழுக்கு நிறைந்தவை. எனவே இத்தகைய உணவில் உள்ள கழிவுகள், ஒருவருக்கு எலும்பு, நரம்பு பலவீனமாக இருந்தால், எலும்பு நரம்புகளில் படிந்து எலும்பு நரம்பு நோய் என மருத்துவ உலகம் நோயைப் பிரிக்கின்றது. இதுபோல் இதயம் பலவீனமாக இருந்தால் இதயத்தில் படிந்து இதயநோய், நுரையீரல் பலவீனமாக இருந்தால் நுரையீரலில் படிந்து நுரையீரல் நோய், மூளை நோய், கல்லீரல் நோய், கணைய நோய், இரைப்பை நோய், கண் நோய், பல் நோய், காது நோய், விதை வீக்கம் நோய், எனப் பல்வேறு நோய்களுக்கும் ஒவ்வொரு நோய்க்காக மருந்துகள், மருத்துவம், அறுவைச் சிகிச்சை எனப் பல்வேறு சிகிச்சைகளையும் ஏற்படுத்தி வருகின்றது.
கழிவுகளின் தேக்கமே நோய், கழிவுகளை வெளியேற்றுவதே மருத்துவம்
நாம் உண்ணும் உணவு, அருந்தும் பானம் இவைகளில் உள்ள கழிவுகளின் வழிகளில் தேக்கம் தான் நோய்; கழிவுகளை இயற்கை வெளியேற்றுவது தான் மருத்துவம். பின் வருமுன் காப்போம் எனும் உடலியக்க விதிப்படி, கழிவுகள் இல்லாத உணவையும், பானத்தையும் படிப்படியாகவோ, அல்லது விரைவாகவோ அவரவரது மன உறுதிக்கேற்ப மாற்றி உண்டு, அருந்தி வாழ்வது தான், கழிவுகள் தேங்க வாய்ப்பில்லாது, நிரந்தரமாக நோயின்றி வாழும் வழியாகும்.
கழிவுகள் இல்லாத, கழிவுகள் தேங்க வாய்ப்பில்லாத உணவு, இயற்கை உணவுகள் தான்; பானம், இயற்கை பானங்கள் தான். இவ்வாறு உடலில் கழிவுகள் தேங்க வைக்கும் அனைத்து சமைத்த செயற்கை உணவுகளையும், செயற்கை பானங்களையும் உண்ண, அருந்த மறுத்து, கழிவுகள் தேங்க வைக்காத இயற்கை உணவுகளை நன்கு பசித்த போது, நன்கு மென்று உண்டு, இயற்கை பானங்களை அருந்தி வாழ முயலுவதுதான் நோயின்றி வாழும் முயற்சிகள், வழிமுறைகளாகும். இதற்கு மருத்துவம் தேவையில்லை; மருந்துகள் தேவையில்லை. மருத்துவர்கள் தேவையில்லை.
இவ்வாறாகத்தான் உயர்திணை உயிரினமாகிய மனிதரைத் தவிர, மனிதரை விடக் கீழான ஐந்தறிவு, நாலறிவு, மூன்றறிவு, இரண்டறிவு, ஓரறிவு உள்ள அனைத்து அஃறிணை உயிரினங்களும் தத்தமக்குரிய இயற்கையுணவை உண்டு, இயற்கை பானம் அருந்தி, இயற்கையோடு இயைந்த வாழ்வு, தனது உயிரினம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை வாழ்ந்து வருகின்றன. நமக்கு வழிகாட்டிகளாக வாழ்கின்றன. அவைகட்கு மழையில் நனைந்தால் ஜலதோஷமில்லை. வெயிலில் அலைகையில் தலை வலி இல்லை. உடல் வலியில்லை. உடலில் எந்தவித நோயுமில்லாமல் எவ்வித மருந்தையோ, மருத்துவரையோ மருத்துவத்தையோ மருத்துவமனையையோ நாடாது, நோய்க்கு நிரந்தரமாகவே இடம் கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றன. குளிர் தாங்க இயலாது ஆடையோ, கம்பளியோ இன்றி, குளிர்காலத்தில் உதகமண்டலத்திலும், கொடைக்கானலிலும் மற்றும் இதர மலைப் பிரதேசங்களிலும், கட்டிடமே இல்லாது குளிர் தாங்கி, மனிதரைவிட அனைத்து வகைகளிலும் உடல், உயிர் ஆற்றலோடு வாழ்ந்து வருகின்றன.
ஆறறிவு படைத்த மனிதராகிய நாமோ, மழையில் நனைந்தால் ஜலதோஷம் (உடலில், தோஷமுள்ள சமைத்த உணவை உண்டு, தோஷத்தை வைத்துக் கொண்டு, தோஷமில்லாத ஜலத்தில் தோஷம் எனக் கூறிவருகிறோம்), எனக் கூறுகிறோம். கழிவுகள் நிறைந்த சமையலுணவில் உலக மாந்தர்கள் எல்லாம் உயிர் வாழ்வதால், வெயிலில் அலையும் போது, உடலிலுள்ள கழிவுகள் தலைவலி (பிரசவ வலி போல்) எனும் ரூபத்தில் வெளியேறுகின்றன. உடல் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்கிறது. (Body heals itself) எனும் இயற்கை உயிரியல் படி, தண்ணீர் உடலிலுள்ள சளி எனும் தோஷத்தையும், சூரிய ஒளி (வெயில்) உடலிலுள்ள கழிவுகளை தலைவலி எனும் உபாதை மூலம் வெளியேற்றும் நல் நிகழ்வுகளை, நோய் எனக் கருதி மருந்தை நாடி, அக்கழிவுகள் வெளியேறா வண்ணம், மருந்து மூலம் உடலுக்குள் அமுக்கித் தேங்க வைத்து, பின் நாட்களில் அதன் விளைவாக கடுமையான நோய்களுக்கு ஆளாகிறோம்.
மனிதருக்குரிய இயற்கையுணவு, உயரமான, வலுவான மரங்களிலிருந்து கிடைக்கும் தேங்காயும் (தெங்கன்பழம்), அனைத்துப் பழ வகைகளுமேயாகும். இயற்கை பானம், பச்சைத் தண்ணீரேயாகும். கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரல்ல. குளோரின் போட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரல்ல.
எனவே ஆருயிர் உலக மானிட உடன் பிறப்புக்களே, நோயின்றி வாழவும், எத்தகைய நோயையும் மருத்துவமின்றி, பக்க விளைவுகள் இன்றி அறுவை சிகிச்சை இன்றி, மருத்துவப் பரிசோதனை இன்றி, இயன்ற வரையில் முற்றிலும் அல்லது பெரும்பாலும் நமக்குரிய இயற்கை உணவாகிய தேங்காய், பழ வகைகள் ஆன உணவை உண்டு, இயற்கையோடியைந்து இயற்கை வாழ்வு வாழ்ந்து, இன்னலின்றி, துயர் இன்றி ஆரோக்கிய ஆனந்த வாழ்வு நிரந்தரமாக வாழ முயலுவோம். மரணமில்லாப் பெருவாழ்வு இலக்கை அடையும் வழியும் இதுதான். விதியை மதியால் வெல்லும் மதியும் இதுதான்.
உலகை நல் உலகாக உண்டாக்க எத்தனையோ புரட்சிகள் (வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி, அமைதிப் புரட்சி மற்றும் பிற ) தோன்றியது போல் இயற்கை உணவைப்புரட்சி இயற்கை வாழ்வுப் புரட்சி மலர்ந்து, நம்மையும் பிற உயிரினங்களையும் இப்பிரபஞ்சத்தையும் அமைதியாகக் காக்க முயலுவோம்! ஒன்றுபடுவோம். அணி திரள்வோம்.
By டாக்டர் அப்பன்
தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986

மனிதனுடைய மரணத்துக்குக் காரணம்?

தமிழகத்தில் வாழ்ந்த, சித்த வேதத்தைத் தோற்றுவித்த ‘காகபுஜண்டர்’ எனும் சித்தர், மனிதருக்கு மரணம், நெஞ்சுச் சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி ஆகியவற்றால்தான் ஏற்படுகின்றது என்றும், இச்சளிகள் மனிதனது உடலில் இல்லையென்றால், மரணமில்லை என்றும் கூறியுள்ளார். அவ்வாறாயின், மனிதருக்கு மட்டும் நெஞ்சுச்சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி ஏன் வருகின்றது?
பால், பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய உணவுகளும், அனைத்து அசைவ உணவுகளும், சமைத்த தானிய உணவுகளும், உப்பும் நாம் தினமும் சாப்பிடுவதால்தான் நமது உடலில் நெஞ்சுச் சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி உண்டாகிறது. இவை எல்லாம் வெளியேறாது அங்கேயே தங்கி, நாள்பட்டு மிகுதியாகி மனிதருக்கு இறப்பை ஏற்படுத்துகின்றது. உப்பு சேர்க்காமல் சமைத்த காய்கறிகள், கீரைகள் உண்பதால் உடலில் சளி உண்டாகாது. மேலும் படிப்படியாக அல்லது எடுத்த எடுப்பிலேயே அனைத்து சமையல் உணவுகளையும் தவிர்த்து, சமைக்காத இயற்கை உணவுகளான தேங்காயும், பழவகைகளையும் உணவாக எடுத்துக்கொண்டு வாழ ஆரம்பிக்கும்போது, உடலில் உள்ள அனைத்து சளிகளும் படிப்படியாக உடலிலிருந்து வெளியேறிவிடும். அதன்பின், சளி இல்லாத வலி இல்லாத நோயில்லாத, இறப்புக்கு வாய்ப்பில்லாத உறுதியான உடலாக அந்த உடல் மாறிவிடும்.
உணவுப் பழக்கத்தைத் தவிர உடலை மேலும் உறுதியுடன் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவுபவை யோகாசனம், பிராணயாமம், தியானம். தினந்தோறும் இவற்றைச் செய்வதன் மூலமும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வப்போது விரத நாட்களில், அல்லது வாய்ப்பு ஏற்படும் நாட்களில், நீர் உண்ணா நோன்பு அல்லது சாறு உண்ணா நோன்பு மேற்கொள்வதன் மூலமும் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய முயற்சி செய்யலாம்.
நீர் உண்ணா நோன்பு என்றால், பசித்தபோதெல்லாம், அல்லது தேவை ஏற்படும்போதெல்லாம் எதுவும் சாப்பிடாமல், தூய்மையான குடி தண்ணீர் மட்டும் தேவையான அளவு அருந்துதல் வேண்டும். இப்படி எத்தனை நாட்கள் தொடர்ந்து வெறும் பச்சைத் தண்ணீரைக் குடித்து வாழ முடியுமோ அதுவரை வாழ்வதாகும்.
சாறு உண்ணா நோன்பு என்றால், பசித்தபோதெல்லாம் அல்லது தேவை ஏற்படும்போதெல்லாம் எதுவும் சாப்பிடாமல், இளநீர், எலுமிச்சம் பழச்சாறு + பச்சைத் தண்ணீர் + தேன் கலந்து, திராட்சைப் பழச்சாறு, ஆரஞ்சு சாறு, தேங்காய்ப் பால், பேரீச்சைப் பழச்சாறு, மாதுளம் பழச் சாறு மற்றும் இதர பழச்சாறுகளில் ஏதேனும் ஒன்றை ஒருவேளைக்கு அருந்தி, மற்ற வேளைகளில் மற்ற பழச்சாறு என அருந்தி இயன்ற நாட்கள் வரை வாழலாம்.
இவ்வாறு உண்ணா நோன்பு மேற்கொள்வதன் மூலம், உடலில் தேங்கியுள்ள சளிகள், கழிவுகள், நச்சுகள் உடலிலிருந்து வெளியேறும். உண்ணா நோன்பு முடியும்பொழுது, நன்கு பழுத்த பழ வகைகள் சாப்பிட்டபின் தேங்காயும், பழ வகைகளும் உணவாக உண்டு, தூய பச்சைத் தண்ணீர், அல்லது இளநீர், அல்லது பழச்சாறு மட்டும் உடலுக்குத் தேவைப்படும்போது அருந்தி வாழ்வதன் மூலமும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ முயலலாம். காபி, தேயிலை, பால், மோர், மற்றும் பிற பானங்கள் முழுவதையும் அருந்துவதை முற்றிலும் தவிர்த்தலும் மரணமில்லாப் பெருவாழ்வுக்கு இன்றியமையாததாகும்.
மரணமில்லாப் பெருவாழ்வுக்கு வள்ளலார் சுவாமிகள் கூறும் வழிமுறைகளைப் பற்றியும் சிந்திப்போம். மனிதரது உடல் அழிய நான்கு காரணங்கள் உள்ளன. அவை 1. உணவு, 2. உறக்கம், 3. உழைப்பு, 4. மைதுனம் எனக் கூறுகிறார்.
இயற்கைக்கு மாறாக சமைத்து உண்பதன் மூலம் மனிதருக்கு நோய் ஏற்பட்டு, உடலும் உயிரும் அழிகிறது. சமைத்துண்ணும் பழக்கத்தினால், மனிதன் மட்டும் கும்பகர்ணன் போன்று குறட்டைவிட்டு, ஆழ்ந்த உறக்கம் கொள்கிறோம். இவ்வாறு உறங்குவதால், உடல் அழிகிறது. பிற உயிரினங்களான விலங்குகள், பறவைகள், மற்றும் இதர உயிரினங்கள் சமைத்து உண்பதில்லை. இயற்கையாக உண்கின்றன; இயற்கையாக வாழ்கின்றன. எனவே, அவையெல்லாம் தூங்காமல் தூங்கி சுகம்பெற்று வாழ்கின்றன. நாம் மட்டும் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் எனப் புலம்பித் திரிகின்றோம். சமைத்து உண்பதால், நாம் மட்டும் இரவு, பகலாகக் கடின உழைப்பு செய்து பணம் சம்பாதிக்கிறோம். இவ்வாறு, கடின உழைப்புக்குப் பின்னர் நமது உடலும் உயிரும் அழிகிறது. சமைத்து உண்பதால், நாம் மட்டும் மிகுதியான மைதுனம் (உடலுறவு) கொள்கிறோம். அதனாலும்கூட நமது உடலும் உயிரும் அழிகிறது.
மேலும் தமிழ்நாட்டில் வாழ்ந்த மகாகவி பாரதியாரும்,
தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!
என, வெந்த உணவாகிய சோறு தினம் தின்று, கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் – இறக்கும் பல வேடிக்கை மனிதர் என நெருப்பில் வெந்த உணவைத் தின்பதால் மனிதருக்கு மரணம் ஏற்படுகின்றது எனத் தீர்க்க தரிசனமாகக் கூறியுள்ளார்.
அடுத்து ‘அலெக்ஸ் கேரல்’ எனும் வெளிநாட்டு உயிரியல் அறிஞர், தனது ‘Man The Unknown’ (மனிதன் புரியாத புதிர்) எனும் நூலில், ஒரு ஆய்வின் மூலம், ‘மனிதன் மரணமில்லாதவன்; மனிதனது மரணத்துக்குக் காரணம், 1. உள் விபத்து; 2. வெளி விபத்து. இவ்விரு விபத்துகளும் இல்லையென்றால், மனிதனுக்குச் சிறிது கூட மரணமேற்பட வாய்ப்பில்லை’ எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.
அவர் செய்த உயிரியல் ஆய்வின் விவரம் -
ஒரு கோழிக்குஞ்சின் இதயத்தின் சதைத் துண்டை அறுத்தெடுத்து, அதை ஒரு சோதனைக் குழாயில் போட்டார். அச்சதையிலுள்ள செல்கள் உயிருடன் இயங்க, ஒரு நுண்ணூட்டத் திரவத்தை அச்சோதனைக் குழாய்க்குள் ஊற்றினார். அச்சதையின் செல்களின் கழிவுகள் வெளியேறும் வண்ணம் அதற்குரிய ஒரு திரவத்தையும் அச்சோதனைக் குழாய்க்குள் ஊற்றினார். எனவே, கோழிக்குஞ்சின் இதயத் தசையில் உள்ள செல்கள் உயிருடன் இயங்கவும், செல்களிலிருந்து கழிவுகள் வெளியேறவும் உரிய திரவங்களை ஊற்றி, ஒரு நுண்பெருக்குக் கண்ணாடி மூலம், அச்செல்களின் இயக்கத்தைக் கவனித்தார். தொடக்கத்தில், அச்செல்களின் இயக்கம் எவ்வாறு இருந்ததோ, பல ஆண்டுகள் ஆகியும் அந்தச் செல்களின் இயக்கம், சிறிதுகூட குன்றவில்லை. மாறாக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தொடக்கத்தில் இருந்த இயக்கமே இருந்தது.
இதிலிருந்து அவர் ஒன்றைச் சிந்தித்தார். ஒரு கோழிக்குஞ்சின் செல்லுக்கே, உரிய நுண்ணூட்டமும், கழிவுகள் வெளியேறவும் வாய்ப்புக் கொடுத்தால், திறமையுடன் குன்றாது செல் இயங்கினால், மனிதரது செல், கோழிக்குஞ்சின் செல்லைவிட மிகவும் அளப்பரியது. திறமை வாய்ந்தது. பேராற்றலுடையது. மிகவும் வலுவானது. எனவே, மனிதரது செல்களும் திறமையாக இயங்கத் தகுந்த நுன்ணூட்டமும், கழிவுகள் வெளியேறுவதற்கும் உரிய தக்க வாய்ப்பளித்தால், மனிதரது செல்லும் சிதையாது. வளர்ச்சி குன்றாது, இறக்காது. மனிதரது செல்கள் இறக்காமல் இருந்தால், மனிதருக்கும் மரணமில்லை (Man is immortal). மாறாக மரணம் வந்தால், உயிருக்கு ஒவ்வாத உணவுகளை உண்டு உள் விபத்து ஏற்பட்டு மரணம் வரலாம். அல்லது வெளி விபத்து ஏற்பட்டு மரணம் வரலாம். இல்லையேல் மனிதனுக்கு மரணமே இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வு உள்ளது எனக் கூறியுள்ளார்.
‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ - இது குறள் கூறும் கருத்து.
By டாக்டர் அப்பன்

Friday, October 30, 2015

எய்ட்ஸ்/ஹெச்.ஐ.வி. நோய்க்கு தமிழ் மருத்துவம் !!!

எய்ட்ஸ், HIV: இன்று ஒரு அன்பர் எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பி பிழைக்க வழி உண்டா? என்று கேட்டிருந்தார்.
இது ஒரு உயிர் கொல்லி நோய் ஆகும். இதனை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆதலால் மருத்துவத்தை மட்டும் தெரிந்து கொள்வோம். இந்நோய் வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் முற்றிலும் குறைந்து போய் இருக்கும். இது தான் முதன் முதல் பிரச்சனை. சரி இதற்க்கு எளிமையான தீர்வு என்பது சித்த மருந்தகங்களில் கிடைக்கும் நரசிம்ம லேகியம், அஸ்வகந்தா லேகியம், ச்சயவன ப்ராஸ் லேகியம், வேப்ப இலை பொடி, அருகம்புல் போடி, கீழாநெல்லி பொடி, மஞ்சள் கரிசாலை பொடி போன்றவை நல்ல பயன் தரும் கூட்டு மருந்துகளாகும்.
மருந்தின் அளவு முறை: லேகியம் மூன்றிலும் ஒவ்வொன்றிலும் சுண்டைக்காய் அளவு எடுத்து மூன்று வேலையும் உணவிற்கு பின் 30 நிமிடத்திற்கு பின் சுவைத்து சாப்பிடவும். பொடி வகைகளை ஒன்றாக கலந்து வைத்து கொண்டு காலை மாலை வெறும் வயற்றில் ஒரு தேக்கரண்டி வீதம் வெந்நீருடன் உட்கொள்ளவும்.
இந்த மருந்துகளால் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நோயாளியின் உடல் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற்று விரைவில் HIV, எய்ட்ஸ் நோயிலிருந்து இருந்து குணம் பெறலாம் அல்லது வாழ்வை ஆயுள் முழுதும் நீடித்து கொண்டே இருக்கலாம். திருச்சிற்றம்பலம்.
தகவல்,நன்றி :- திரு.கிரிதரன் மகாதேவன் அவர்கள்

Sunday, October 18, 2015

மலை வேம்பு - மருத்துவப் பயன்கள் !!!

கருப்பைக் கோளாறுகள்
மலை வேம்பு இலைக் கசாயம் 
தினமும் காலை என
மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தாலே போதும்
அனைத்து கருப்பைக் குன்றங்களும் கோளாறுகளும் நீங்கி
நலம் அடைவர்
தாய்மைப் பெரும் அடைவர்
கசாயம் செய்யும் முறை
நூறு மில்லி கொதிக்கும்
நீரில் ஐந்து கிராம் மலை வேப்ப மரத்து (மலை வேம்பு) இலைகள் போட்டு
நன்கு கொதிக்க வைத்து
இருபது மில்லியாகச் சுருக்கி
இறக்கி வடிகட்டி
காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்
இது அனுபவ வைத்தியமாகும்
பயன்படுத்திப் பலன் அடையுங்கள்
பெரும்பாடு
மலை வேம்பு மரப் பட்டை --- ஐந்து கிராம்
நாட்டுப் பசும்பால் ------ நூறு மில்லி
மலை வேம்பு மரத்துப் பட்டையை
நாட்டுப் பசும்பாலில் போட்டு காய்ச்சி
இறக்கி வடிகட்டி
பத்து நாட்களுக்கு ஒருமுறை என
மாதம் மூன்று முறை மட்டும்
இரண்டு மாதங்கள் மட்டும்
குடித்துவர
பெண்களின் பெரும்பாடு என்னும் அதி உதிரப் போக்கு
வயிற்று வலியுடன் கூடிய மாதவிலக்கு நோய்கள்
பரி பூரணமாகக் குணமடையும்
பொடுகு
பலருக்கு தொல்லை தரும் பொடுகு நோய்க்கு மிகச் சிறந்த மருந்து
பயன் படுத்திப் பலன் அடையுங்கள்
சிகைக்காய் ---பத்து கிராம்
மலை வேம்பு இலைகள் --பதினைந்து கிராம்
இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து
வெந்நீரில் முதலில் தலையைக் கழுவி
பின் பின் இந்த விழுதை தலை முழுவதும் வேர்க்கால்களில் நன்கு படும்படி தேய்த்து
ஐந்து நிமிடங்களால் ஊறிய பின்
வெந்நீரில் தலைக்குக் குளித்து வர பொடுகு நீங்கும்

குறிப்பு
முருங்கை மரம் ஆண்களுக்கு எப்படி நன்மை செய்யுமோ
அதே போல
மலை வேம்பு மரம் பெண்களுக்கு மிகுந்த நன்மை செய்யும் மரம் ஆகும்
மலை வேம்பு மரம் என்பது நம் ஊர்களில் இருக்கும் நாட்டு வேப்ப மரத்திநின்று
வேறு பட்ட ஒன்றாகும்
தற்போது எல்லா ஊர்களிலும் வளர்க்கிறார்கள்
இதன் கன்றுகள் ஈஷா வில் கிடைக்கிறது
தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ் அவர்கள்

Tuesday, October 13, 2015

மஞ்சள்காமாலைக்கு பத்தியமில்லா ஒரு நாள் மருந்து!!!


கால் கிலோ வெள்ளாட்டின் ஈரல் வாங்கி அதை நன்கு கீறி அதில் ஆமணக்கு இலைக் கொழுந்து மற்றும் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்தரைத்துப்பூசி பச்சைப்பனை ஓலை நடுவில் வைத்துச் சுற்றி அனலில் காட்டி, ஓலை கருகாமல் பதமாக வேக வைத்துப் பின் அதைச் சுவைத்துச் சாப்பிடவும் ஒரே வேளையில் மஞ்சள் காமாலை தீரும்.

புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் / புற்று நோய் (prostate glands)

இது பொதுவாக வயதான மனிதர்களுக்கு வரும் தொல்லை. இதை சதையடைப்பு அல்லது நீரடைப்பு என்பர். விந்துப் பை மற்றும் சிறுநீர் பையிலிருந்து வெளியேற்றும் குழாய்கள் சேரும் இடத்தருகே உள்ளது. இது விந்தையும் சிறுநீரையும் முறையாக வெளியாக்க உதவுகிறது. சிறுநீர் பையின் அடிப்பாகத்தில் வெளிப்புறமாக சிறுநீர் பாதையை சூழ்ந்து காணப்படும் பரஸ்தகோளம் என்னும் புராஸ்டேட் கோளத்தின் வீக்கமே முதுமையில் தோன்றும் சிறுநீர் பிரச்னைக்கு காரணமாக அமைகிறது.புராஸ்டேட் திரவத்தை தாங்கி, விந்து திரவத்துடன் இணைந்து, உறவின் போது சீராக வெளிப்படுவதற்கு உதவியாக இருக்கும் இந்த கோளங்கள் முதுமையின் காரணமாக சற்று பெருக்கின்றன. அத்துடன் இதன் சுருங்கி விரியும் தன்மை குறைந்து, கடினமாகி வீக்கமடைந்து, ஆண்களின் சிறுநீர் வெளியேறும் பாதையை இறுக்கி பிடிக்கின்றன.
இதனால், சிறுநீர் பையில் நிறையும் சிறுநீரானது வெளியேற இயலாமல் சிறுநீர் பையின் உள்ளேயும், சிறுநீர் பாதையை நோக்கியும் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துவதால் முதியவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது. ஆனால், புராஸ்டேட் வீக்கத்தினால் சிறுநீர் பாதை சுருங்கி சிறுநீர் பையில் முழுமையாக சிறுநீர் வெளியேறாமல் தங்கி விடுவதால், சில மணி நேரங்களில் பல முறை எழுகின்றனர். இதனால், அவர்கள் தூக்கம் கெடுவதுடன் சுற்றியுள்ளவர்களும் தொல்லையாகி அவர்களும் எரிச்சலடையும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த தொல்லைகள் மக்களால் கல்லடைப்பு, சதையடைப்பு (prostate glands) என்று கூறப்படுகின்றது. இதற்க்கு எத்தனையோ எளிய மூலிகை மருந்துகள் உள்ளன. சிறு பீளை, மற்றும் சிறு நெருஞ்சில் செடிகளை வேருடன் பிடுங்கி நிழலில் காயவைத்துப் பொடியாக்கிக் கொள்க. இரண்டும் சேர்ந்த 100கிராம பொடிக்கு 10 கிராம் மிளகும், 10 கிராம் சீரகமும் பொடி செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். காலை, மாலை உணவுக்கு முன் 5கிராம் பொடியை 2 குவளை நீரிலிட்டு அரைக்குவளையாக காய்ச்சி வடித்துக் குடிக்க புரஸ்த கோளங்களின் வீக்கம், புண், புற்று நீங்கி சுகமடைவார்கள். மேலும், அனைத்து சிறு நீரக கோளாறுகளையும் இந்த மூலிகைகளை கொண்டு தீர்க்க முடியும்
http://siddhahealer.blogspot.in/2011/04/blog-post_23.html

கர்ப்ப பை கட்டிகளுக்கு- நோய்களுக்கு (uterus fibroids) !!!

கர்ப்பபை நோய்களை நீக்கி சுகப் படுத்த கீழ்கண்ட மூலிகைகள் சிறப்பானவை.
கறிவேப்பிலை, 2. அம்மான் பச்சரிசி. 3. குப்பைமேனி,
4. சிறுசெறுபடை, 5. அருகம் புல்
இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்க. உடன் மிளகு, சீரகம் 10 ல் 1 பங்கு கலந்து பொடித்துக் கொள்க. இந்த கலவையை தேவையுள்ளவர்கள் மோரில் 1 தேக்கரண்டி கலந்து - அதிகாலை குளித்த பின் குடித்து வர, கர்ப்ப பை சார்ந்த நொயனைத்தும் தீரும். கர்ப்ப பைக் கட்டிகள் தீரும்.

Sunday, October 11, 2015

வலிப்பு பிரச்சனையால் அவதியா? இதோ தீர்வு தரும் மூலிகை !!!

சடா மாஞ்சில் எனும் மூலிகை மாதவிலக்கு பிரச்சனையை சீராக்கி, வலிப்புக்கு தீர்வு தருகிறது.
ஸ்பைக்னால்(Spikenard Plant) ஆங்கில பெயர், மாதவிலக்கு கோளாறு போக்கும். மாத விலக்கை தூண்டக் கூடியது. இதற்கு சடா மாஞ்சில் தேனீர் குடிக்கலாம்.
செய்முறை:
சடா மாஞ்சில் வேர் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு சடா மாஞ்சில் 1 கிராம் முதல் 2 கிராம் வரை சேர்த்து அரை ஸ்பூன் கருஞ்சீரகம், பனைவெல்லம் 1 ஸ்பூன் போட்டு கொதிக்க விட்டு தேனீர் தயாரித்து வடிகட்டி குடிக்க வேண்டும். தடைபட்ட மாதவிடாய் சீர்படும்.
பெண்களுக்கு மாதவிடாய் நேரம் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன் பயன்படுத்த தொடங்கினால் ஒருவாரத்துக்குள்ளாகவே குணம் தெரியும்.
குறைவான ரத்த போக்கு உள்ளவர்கள் சடா மாஞ்சில் எடுத்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மாத விலக்கு காலங்களில் ஏற்படும் வயிற்று வலி குறையும்.
சடா மாஞ்சில் மூளைக்கு இதமான நிலை தரும். நரம்புக்கு பலம் தரக்கூடியது. 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாதாரணமாக எடுத்துக்கொள்வதை இந்திய மருத்துவம் பரிந்துரைக்கிறது. அதிகம் எடுத்தால் தூக்கம் அதிகரிக்கும்.
ஞாபக சக்தி தூண்டக்கூடியது. வயது ஆவதினால் ஏற்படும் மறதி போக்கும், சோர்வு நிலை மாறும்.
காக்காய் வலிப்பு வராத வண்ணம் தடுக்கக் கூடியது. குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். சடா மாஞ்சில் தனிப்பட்ட முறையில் கருப்பை கோளாறு போக்கக்கூடியது.

Monday, October 5, 2015

நிறைய நோய்களுக்கு பயனுள்ள தைலம் !

பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்
இப்பொழுது அதன் செய்முறை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம்.
சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று வீரம், பூரம்,லிங்கம்,தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று தங்கம், வெள்ளி, செம்பு, அயம், பித்தளை போன்ற
உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு செய்வது
ஒரு முறை.
நாம் ஒரு முறையை பார்ப்போம்.
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
புதினா உப்பு - MENTHOL
ஓம உப்பு - THYMOL
கட்டி கற்பூரம் - CAMPHOR
(அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது )
இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.
சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்.
இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்.
இப்பொழுது தைலம் தயார்.
இது மிகவும் வீரியமான தைலம்.
உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்கவேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்.
இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது.
பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது .இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.
இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.
கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்.
சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்.
இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.
http://aadimaruthuvam.blogspot.in/
( தைமால்,மெந்தால்,கற்பூரம் மூன்றும் சம அளவு.நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.நான் என்னுடைய கிளினிக்கில் அநேக வருடங்களாக,நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு கொடுத்து பயன் அடைந்து உள்ளார்கள் )