Sunday, July 26, 2015

சிறுநீரக நோய்கள் நீங்க சித்தர்கள் அருளிய மருந்துகள்!!!

சிறுநீரகம்
இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது முந்திரிக்
கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக
இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக்
காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம்.
இருதயத்திலிருந்து பம்ப் செய்யப்பட்ட சுத்த இரத்தமானது உடல் முழுவதும் சென்று அவைகளுக்கு வேண்டிய சக்திதயை அளித்து, அங்குள்ள
வேண்டாத கழிவுகள், தேய்ந்த அழிந்த பொருட்களை எடுத்து வரும் ரத்தம் இந்த வடிகாலான சிறுநீரகத்தை அடைகிறது. அங்கு மிக விரைவாக
வேண்டாத பொருட்களையும், நீரையும் பிரித்துவிட்டு ரத்ததை இருதயத்திற்கு அனுப்புகிறது. கழிவுப் பொருட்களை ஒரு வாய்க்காலின் மூலமாகச்
சிறுநீர் பைக்கு அனுப்புகிறது. சிறுநீர்ப்பை அடி வயிற்றின் கீழப்பாகத்தில் இருக்கிறது. அங்கு கழிவு நீர் சொட்டுச் சொட்டாய் வந்து சேரும்.
சிறுநீர்ப்பை பாதி நிறைந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்படும். இந்தச் சிறுநீரில் 95 சதவீதம் நீரும், 5 பங்கு பிற கழிவுப்
பொருட்களும் இருக்கும். அதில் பாதி அளவு தசைகளும் எலும்புகளும் அழிவதால் ஏற்படும் கழிவுப் பொருட்களாகிய யூரியாவும் மீதியில் நாம்
உண்ணும் உணவில் உள்ள உப்பு, சல்பேட் போன்றவை இருக்கும்.
பிட்யூட்டரி, தைராய்டு, கல்லீரல், பாங்கிரியான் இவற்றில் ஏதேனும் ஒன்றில் நோயோ, பாதிப்போ ஏற்பட்டால் அது மூத்திரக் காயையும்
பாதிக்கும்.
சிறுநீரகக் கல்
சிறுநீர் போக வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்பட்டதும் சிறுநீர் கழிக்க வேண்டும். அவ்வாறு போகாமல் அடக்கி வைப்பது, கடின நீர், உப்புச்சத்தால்
நீர் குடிப்பது போன்றவற்றால் சிறு மணல் போன்ற உப்புகள் சிறுநீரகத்தில் தோன்றும். அதிகம் சுத்தமான நீர் குடித்தல், யோகாசனம் செய்தல்
போன்றவற்றால் இதனை நீக்கலாம். அவ்வாறு செய்யாது இருந்தால் அந்த மணல் ஒன்று சேர்ந்து உறைந்து கற்களால் மாறும். சிறுநீர் போகும்
வழியை அடைக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும்.
சிறுநீரக நோய்கள் நீங்க சித்தர்கள் அருளிய மருந்துகள்
1. ரோஜாப் பூ ஊறவைத்த தண்ணீரில் முள்ளங்கியின் சாறு விட்டு தினம் நான்கு வேளை குடிக்க நீர்ச்சுருக்கு நோய் ஒழியும்.
2. நன்னாரி வேர், கொத்துமல்லி, சிறுநெருஞ்சி தலா 50கி. எடுத்து நசுக்கி 2 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடித்து தினம் மூன்று
வேளை நூறு மில்லி வீதம் சாப்பிட்டு வர நீர் எரிச்சல் தணியும்.
3. கொத்தமல்லியும் புளியங்கொட்டைத் தோலும் வறுத்துப் பொடித்து காபி போன்று கசாயமிட்டுக் குடித்தால் நீர்க்கடுப்பு தீரும்.
4. ஆடுதீண்டாப்பாளை, கருஞ்சீரகம் இவற்றை அளவாக எடுத்து காடி நீர் விட்டரைத்து தொப்பிளின் கீழ் பூச நீரடைப்பு விலகும்.
5. வாழைக்கிழங்கில் ஊறும் நீருடன் நெல்லிக்காய் அளவு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட மூத்திர அடைப்பு அகலும்.
6. வாழைத்தண்டை சிறு துண்டுகளாக்கி தயிரில் கலக்கி தாளிக்க தயிர் பச்சடியாக உண்ண நீர் இறங்கும்.
7. வெங்காயத்தை அரைத்து விழுதாக்கி 100 கிராம் வீதம் உட்கொள்ள மூத்திரத் தாரையில் உண்டாகும் கல் கரையும். கருஞ்சீரகத்தைத்
தேனுடன் கலந்து சாப்பிட்டு வர கல் கரையும்.
8. பொட்டிலுப்பு 100 கிராம், வெங்காரம் 100 கிராம், சிலாசத்து 100 கிராம் இவை மூன்றையும் நெல்லிக்காய்ச் சாறு, காற்றாழைச்சாறு,
முள்ளங்கிச் சாறு, வாழைத்தண்டுச் சாறு இவை மூன்றையும் முறையே ஒவ்வொரு நாளாக விட்டு அரைத்து வில்லைத் தட்டி புடமிட
வேண்டும். புடம் ஊறிய பிறகு எடுத்துக் கல்வத்தில் இட்டு அரைத்துப் புட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு 20 மில்லி கிராம் மோரில் கலந்து
சாப்பிட்டு வர கல்லடைப்பு நீங்கும்.
9. வெங்காரம் சிலாசத்து, நண்டுக்கல் இவற்றை 20 கிராம் எடுத்து கற்றாழைச் சாறு விட்டு அரைத்து புடமிட்டு எடுத்துக் கல்வத்திலிட்டு
அரைத்து எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சிட்டிகை அளவு எடுத்து நெய்யில் கலந்து சாப்பிட வேண்டும். மூத்திரம் மோர் கலந்தது
போல் வெளியாவது நிற்கும்.
10. முடக்கொத்தான் ஒரு பலம், வெள்ளைப் பூண்டு அரைப்பலம், இரண்டையும் அரைத்து மூன்று நாட்கள் உட்கொள்ள சிறுநீர்க் கட்டு இறங்கும்.
கொண்டிடுக் கொத்தானிடைப்பலம் பூண்டிடும் வெள்ளைப் பூண்டிடு அரைப்பலம் வெண்டிடு மரைத்திவ்வித மூன்று நாள் கண்டுஞ் சிறு
நீர்க்கட்டிறங்குமே & தேரையர்
11. பச்சரிச்சி ஆறு பலம் எடுத்து விராலி இலைத்துளிரைக் கூட்டி கொடுத்திட்டால் சிறுநீரில் இரத்தம் வருவது நிற்கும்.
பாடும் நீரினில் ரத்தம் விழுந்திடில் கூடும் பச்சரிசியின் அறுபலம் சாடும் விராலி இலையின் துளிர் கூட்டி நாடுமூன்று நாள் நயந்து கொடுத்திடே.
12. சுக்கு, இந்துப்பு, கல்மதம் இவற்றை நீர்விட்டு அரைத்துக் குடிக்க வயிறு கழிச்சல் உண்டாகும். நீர்க்கடுப்பு தீரும்.
13. நொச்சி இலை ஒரு பிடியும், முருக்கம் பூ ஒரு பிடியும் சட்டியில் இட்டு வதக்கி விரைவாதம் கட்ட குணமாகும்.
கழற்சி இலை, உழிஞ்சை இலை, பூண்டு, வசம்பு, உப்பு இவைகளைச் சேர்த்து சட்டியைக் காயவைத்து அதிலிட்டு வெதுப்பி சிவந்து வருகிற போது
ஒரு பிழிதுணியில் தட்டி கட்டி வீங்கியிருக்கிற விரையில் அனத்தவும். இப்படி மூன்று தடவை அனத்தி மூன்றாவது தடவை இலை வைத்துக்
கட்டவும். இப்படி மூன்று தடவை வைத்துக் கட்டினால் விரைவீக்கம், வாதம், அண்டசூலை நோய்கள் குணமாகும்.
14. வசம்பு, உள்ளி, வழுதலை, மிளகு, சுக்கு வகைக்கு அரை பலம் இவைகளை அரைத்து வெந்நீரில் 5 நாள் உட்கொள்ள அண்டவாதம்
குணமாகும்.உண்டிடும் வசம்பு உள்ளி விழுதலைக் கொண்டிடு மிளகு சீறுசுக்கொடுக் கண்டிரு வகையொன்றுக் கரைப்பலம்
தொன்றிடு மரைத்தூட்டு வென்னீரிலே.
15. மிளகு ஒரு பலம், பூரம் ஒரு களஞ்சி எடை, லிங்கம் கால் களஞ்சி எடை இவைகளைத் தேன் விட்டு அரைக்க மெழுகாகும். இந்த மெழுகை
தூதுளங்காய் அளவு உருட்டி இரண்டு வேளை வீதம் ஐந்து நாள் உட்கொள்ள விரைவாதம் இடைஞ்சல் நீங்கும். உப்பு, புளி, புகை நீக்க வேண்டும்.
நீங்கு நன்மிளகு வகையோர் பலம் நுங்கு பூரமுமொன்று களஞ்சிடை வாங்கு லிங்கம் வகையது காலதாய் ஆங்கு தேன் விட்டரை மெழுகாகுமே.
17. கழஞ்சி வேர், கழற்சி விதை இரண்டையும் எடுத்து சிறுநீர் விட்டரைத்து கொதிக்க வைத்து பூசிவர விரைவீக்கம் குறையும்.
புளியின் வடக்கு நோக்கிப் போகும் வேரை எடுத்து வந்து சாராயம் விட்டரைத்து விரையில் பூச வீக்கம் குறையும்.
18. கொழுஞ்சி இலை, வேப்பிலை தளிர் இலைகளை கழற்சி இலை இடித்துப் பிழிந்த சாற்றில் அரைத்துக் கொதிக்கச் செய்து பூசி வரவிரைவீக்கம்
குறையும்.
19. அமுக்கூரம், கழற்சி விதை, காந்தம், எள்ளு விதை, யானை திப்பிலி இவற்றை அளவாக எடுத்து முட்டை வெண் கரு விட்டரைத்துப் பூசி
வந்தால் விரைவீக்கம் குறையும்.
20. முருங்கையின் வடக்கு நோக்கிப் போகும் வேர், சுக்கு இவற்றை எடுத்துச் சாராயம் விட்டரைத்துப் பூச குணமாகும்.
21. வெள்ளை எருக்கலை வேர் தொலி, சர்க்கரை எடுத்து வந்து அரைத்து ஆறு வேளை உட்கொள்ள விரைவாதம் நீங்கும்.
22. யாழ்ப்பாண புகையிலையை வாங்கி துண்டாக்கி விரையில் பூசிவர வீக்கம் குணமாகும்.
23. அத்தி இலை, வில்வ இலை, வேம்பு இலை, ஆடாதொடை இவைகளைச் சமனளவாக எடுத்து நிழலில் காயவைத்து இடித்துச் சூரணம் செய்து
காலை, மாலை பாலில் கலந்து சாப்பிட சிறுநீரகம் நல்ல முறையில் செயல்படுவதுடன் கல்லடைப்பு, நீர்த்தாரைப்புண், நீர்ச்சுருக்கு நோய்கள்
குணமாகும்.
24. படிகாரம் 35 கிராம், கல்மதம் 35 கிராம் எடுத்து முறைப்படி சுத்தி செய்து குழியம்மியிலிட்டு சேர்த்து கற்றாழைச் சாறு விட்டு நன்கு நெகிழ
ஆறு மணி நேரம் அரைத்து வில்லை செய்து வெயிலில் உலர்த்தி அகலில் வைத்து சீலை செய்து 50 எருவில் புடமிட்டெடுக்க உயர்ந்த
பற்பமாகும். இந்த பற்பத்தைத் தேனில் கலந்து கொடுக்க சிறுநீரில் விந்து விழுவது நிற்கும்.
25. வெள்ளரிக்காயானது சிறுநீரக நோய்களை நீக்க வல்லது. சிறுநீர் பிரியாமல் அடி வயிறு ஊதிப்போனால் வெள்ளரிக்காய் விதைகளை
அரைத்து அடிவயிற்றில் பூசினால் சிறிது நேரத்தில் நீர் பாய்ந்து விடும்.
26. சிறு பசலையானது நீர்க்கடுப்பு, நிரடைப்பு, வெள்ளை படுதல், சுபையின்மை, வாந்தி ஆகியவை போக்கும்.
நீர்க்கடுப்பு நீரமைப்பு நீங்காத மேகசம் வார்க்கடுத்து வாராமல் கட்டுங்கொண் & பார்க்கவொண்ணா அற்ப விடைமாதே! அரோசிசர்த்தியைத்
தொலைக்கும் நற்பசலைக் கீரையது நன்று.
27. சிறுபீளையால் பாண்டு, பெரும்பாடு, நீர் எரிச்சல், நீரடைப்பு, கல்லடைப்பு, குடற்சூலை, குருதிச்சூடு முதலியன நீங்கும்.
இதன் இலைச்சாற்றினை குடித்து பர பெரும்பாடு, கல்லடைப்பு, நீரடைப்பு போகும். இதன் வேரைச் சேர்த்துக் காய்ச்சிக் குடீத்து வர சூல் கொண்ட
பெண்களுக்கு வலுவேற்றும்.
28. மேகம், வெண்புள்ளி, கல்லடைப்பு, நீர்வேட்கை, எலும்புருக்கி நோய் ஆகியவற்றை யானை நெருஞ்சில் போக்கும்.
மேகத்தைப் போக்கிவிடும் வெண்குட்டந் தானொழிக்குந் தேகத்திற் கல்லடைப்பைத் தீர்க்குங்காண் & நாகத்தாந் தேனையரும் பாகைத் திருத்துங்
கிளிமொழியே யானை நெருஞ்சிலது.
29. சிறுபீளை மூலிகையின் இலைச்சாற்றால் 50 மி.லி. வீதம் குடித்து வர கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல் போம். நிரடைப்பு கல்லடைப்பு
நீங்காக் குடற்சூலை போரடரி ரத்தகணம் போக்குங்காண் & வாரிறுக்கும் பூண்முலையே! கேளாய் பொருந்துஞ் சிறுபீளை யாமிதுகற்பேதியறி.
கக்குஞ் சிறுபீளைகார் நெருஞ்சி மாவிலங்கை விக்கும் பேராமுட்டி வேருடனே& யொக்கவே கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு
காட்டிக் கழன்றோடுங் காண்
30. செங்கீரையினால் சிறுநீர் எரிச்சல், வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக்கடுப்பு முதலியன போம்.தண்டுமெத்த வாய்வு தணியாத சீதளமாம்
விண்டுரைக்கில் சின்னோய்போம் விள்ளவோ கொண்டக்கால் நீர்க்கடுப்பு வெட்டையனல் நில்லாது நேரிழையோ போர்க்கடுப்பி ரத்தமும் போம்போம்.

சிவனருளால் சிறுநீரகங்களைச் சீராக்கும் சிறுபீளை!

சித்த மருத்துவ நிபுணர் அருண்சின்னையா
வாழ்க்கை உணர்வுப்பூர்வமாக வாழப்பட வேண்டும். நுட்பமான உணர்வுகளே நம்மை இறையருளை நாடச்செய்து- இறைவனின் பேரருளைப் பெறச் செய்யும். மனம்போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், ஒரு கட்டத்தில் நாம் வெறுமையாய் உணர்வோம். இன்ப- துன்பங்களும் மேடு- பள்ளங்களும் நிறைந்த இந்த வாழ்க்கையில் பிறவிப் பேறை அடைவதே இந்த பிறவி எடுத்ததன் பயன் ஆகும்.
உணவு விஷமித்தால் உடலும் விஷமாகும். அத்துடன் மனமும் விஷமித்து நம் சிந்தனையும் விஷமாகும். ஆக, நீலகண்டனாம் சிவபெருமானின் அருள் பெற்ற நடமாடும் சித்தனாம், சிறு பீளையைச் சரணடைந்து நலம் பெற முனைவோம், வாருங்கள்.
தமிழர் திருநாளான தைப் பொங்கல் திருநாளில் நம் இல்லமெல்லாம் அலங்கரிக்கும் சிறுபீளையைப் பார்த்திருப்பீர்கள். சிறுசிறு வெண்ணிறப் பூக்கள் கொண்டு பார்ப்பதற்கு மிக அழகாய் இருக்கும். இதனை சித்தர்கள் "பாஷாணபேதி' என்று சொல்வார்கள். அதாவது சித்தர்கள் தங்களது மருந்து செய்முறையில் 64 வகையான பாஷாணங்களைக் கையாண்டு வந்தார்கள். 64 பாஷாணங்களையும் சுத்தி செய்து அவற்றை மருந்தாக்கி கடுமையான நோய்களுக்கு சிகிச்சையளித்து வந்தனர். இப்பொழுதும் 64 பாஷாணங்களைக் கொண்டு சித்த மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய பாஷாணங்களைக் கொண்டு செய்யப்படும் சித்த மருந்துகளிலும், சில நேரங்களில் பக்க விளைவுகள் ஏற்படுவது உண்டு. அத்தகைய பாஷாணங்களினால் ஏற்படும் பக்க விளைவுகளை முழுமையாகக் குணப்படுத்தும் தன்மை சிவன் அருள் பெற்ற சிறுபீளைக்கே உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.
நமது உடம்பில் ரத்த சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள உறுப்புகளில் மிகவும் முக்கியமானது நமது சிறுநீரகங்களாகும். சிறுநீரகங்கள் உணர்வுப் பூர்வமான உறுப்பாகும். சிறுநீரகங்களில் உண்டாகும் சிறுநீரகக் கட்டி, சிறுநீரக வீக்கம், சிறுநீரகங்கள் சுருங்கிப் போதல், சிறுநீரகங்களில் உண்டாகும் சீழ் வியாதிகள், சிறுநீரகக் கற்கள், சிறுநீரகத் தொற்று வியாதிகள், சிறுநீர் அதிகமாகப் போதல், நீர் சுருக்கு, நீர் கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற வியாதிகளுக்கு மிகச் சிறந்த பலனைத் தரும் மாமருந்து இந்த சிறு பீளையாகும்.
மேலும் உடல் பருமன், வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை கோளாறுகள், ஆண்மைக் குறைபாடுகள் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.
ரத்தத்தில் உப்பு அதிகரிப்பதைக் குறைக்க...
நெருஞ்சில் 50 கிராம், சீரகம் 50 கிராம், சோம்பு 50 கிராம், சிறுபீளை வேர் 50 கிராம் என சம அளவு எடுத்துக்கொண்டு, அவற்றைக் காய வைத்து தூள் செய்து கொள்ளவும். இந்தத் தூளை காலை- இரவு இரு வேளையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரவும். அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம். இவ்வாறு தொடர்ந்து மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை சாப்பிட்டு வர, ரத்தத்தில் உள்ள உப்பு அதிகரிப்பைக் குறைக்கும்.
சிறுநீரக வியாதிகள் தீர...
நெருஞ்சில் 50 கிராம், சாரணை வேர் 50 கிராம், சிறுபீளை வேர் 50 கிராம், சோம்பு 50 கிராம், சீரகம் 50 கிராம், சதகுப்பை 50 கிராம், கீழாநெல்லி 50 கிராம் எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். சோம்பு, சீரகத்தை இளவறுப்பாய் வறுத்துக்கொள்ளவும். பின்னர் அனைத்துச் சரக்குகளையும் ஒன்றாகக் கலந்து அரைத்துக் கொள்ளவும், இந்த தூளை தினமும் காலை- இரவு உணவுக்குப் பின் 25 கிராம் அளவு தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக வியாதிகள் தீரும்.
சிறுநீரகக் கற்கள் கரைய...
மாவிலங்கப்பட்டை 20 கிராம், நெல்லிக்காய் 20 கிராம், கடுக்காய் 20 கிராம், தான்றிக்காய் 20 கிராம், நெருஞ்சில் 20 கிராம், சீரகம் 20 கிராம், சோம்பு 20 கிராம், தனியா விதை 20 கிராம், சதகுப்பை 20 கிராம், சிறுபீளை வேர் 20 கிராம் எடுத்து சுத்தம் செய்துகொள்ளவும். அதை இரண்டு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து, ஒரு லிட்டர் தண்ணீராகக் சுண்டச் செய்த பிறகு, அந்த தண்ணீரை காலை- மாலை இருவேளையும் தொடர்ந்து குடித்து வர, சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையும்.
வெள்ளைப்படுதல் நீங்க...
அம்மான் பச்சரிசி 20 கிராம், பாதாம் பிசின் 20 கிராம், சிறுபீளை வேர் 20 கிராம், அதிமதுரம் 20 கிராம், மஞ்சள் 20 கிராம் எடுத்துக் காயவைத்து அரைத்து தூளாக்கிக் கொள்ளவும். இந்தத் தூளை காலை- மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் நீங்கும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் சாப்பிட்டு வர வேண்டும்.
உடல் பருமன் குறைய...
வாய்விளங்கம் 50 கிராம், ஓமம் 50 கிராம், சீரகம் 50 கிராம், சுண்டை வற்றல் 50 கிராம், சிறுபீளை வேர் 50 கிராம், மாதுளை ஓடு 50 கிராம், சாரணை வேர் 50 கிராம் எடுத்து சுத்தம் செய்து தூள் செய்துகொள்ளவும். இந்தத் தூளை காலை- இரவு இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
ஆண்மைக் குறைபாடு நீங்க...
பூனைக்காலி விதை 50 கிராம், தண்ணீர் விட்டான் கிழங்கு 50 கிராம், நிலப் பனங்கிழங்கு 50 கிராம், நத்தை சூரி விதை 50 கிராம், சாலாமிசிரி 50 கிராம், சிறுபீளை 50 கிராம், அமுக்கரா 50 கிராம் எடுத்து சுத்தம் செய்து ஒன்றாகக் கலந்து தூளாக்கிக் கொள்ளவும். இந்தத் தூளை ஒரு ஸ்பூன் வீதம் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைபாடு, கை- கால் நடுக்கம் போன்றவை முற்றிலும் குணமாகும்.
நமது உடம்பு விஷமித்தால் நமது சிந்தனை விஷமிக்கும்; செயல்பாடு குறையும். பிறவிப் பயன் பெறுவது பெரும் சிக்கலாகும். எனவே சிறுபீளையைச் சரணடைந்து சிறப்பான பலன் அடைந்து ஈசன் அருளால் நல்வாழ்வு வாழ்வோம்!
http://www.nakkheeran.in/


Wednesday, July 22, 2015

வயிற்றுப்புண் குணமாக....!!!

தேவையானவை:
* சாதிக்காய் பொடி- 50 கிராம்
* மாசிக்காய் பொடி- 50 கிராம்
* கடுக்காய் பொடி- 50 கிராம்
* மருதாணி பொடி - 25 கிராம்
இவைகளை ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு, இதில்
ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, அரை டம்ளர் சுடு தண்ணீரில்,
கலந்து, ஆற வைத்து குடிக்க,
தொண்டையிலிருந்து, குடல் பகுதி வரையில் ஏற்படும் புண்கள்
குணமாகும்.
வாய்ப்புண், ஈறுவீக்கம், பல்லரணை குணமாக....!!!!!!
2 * முன் கூறிய பொடிகளோடு,
50 கிராம் படிகாரத்தை சேர்த்திடித்து வைத்துக் கொள்ளவும்.
இதில் அரை தேக்கரண்டி எடுத்து,
அரை டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து,
வாய் கொப்பளித்துத் துப்ப,
வாய்ப்புண்கள், பல்லரணை, ஈறு வீக்கம், பல்வலி, ஈறுகளில்
இரத்தக் கசிவு போன்ற உபாதைகள் தீரும்.
http://tamizhmaruththuvam.blogspot.in/

Tuesday, July 21, 2015

எச்1என்1 (H1N1 - பன்றிக்காய்ச்சல்

பயம் வேண்டாம்... பதற்றம் வேண்டாம்!
“இந்த நூற்றாண்டில், திடீர் திடீரென நோய்கள் பரவி, பதற்றத்தை உருவாக்கி வருகின்றன. நம் முன்னோர்கள், பல காய்ச்சல்களுக்கும் கண்டறிந்துவைத்துள்ள மருந்துகளை நாம்தான் கண்டுகொள்வதும் இல்லை. உபயோகிப்பதும் இல்லை. வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய காய்ச்சல்களை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே `கபசுரம்’ என்று வகை பிரித்து, மருந்தும் சொல்லியிருக்கிறார் யூகி முனி என்ற மாமுனிவர். இப்போது மக்களை பீதிக்கு உள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சலும் இந்த கபசுரத்துக்குள் அடங்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
“பன்றிக்காய்ச்சல் வரக் காரணம் என்ன?”
“எச்1என்1 (H1N1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஒரு கலப்பின நுண்ணுயிரிதான் (Mutated virus) இந்தக் காய்ச்சலுக்குக் காரணம். மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளில் குப்பையில் கொட்டப்படும் பன்றி இறைச்சி, கோழி இறைச்சி போன்றவை அழுகிய நிலையில் இருக்கும்போது, அதில் இருந்து உருவாகும் நுண்ணுயிரி இது. அங்கிருந்துதான் நம் நாட்டுக்குப் பரவியிருக்கிறது. அந்த நாடுகளின் சீதோஷ்ண நிலையில் இது வேகமாகப் பரவக்கூடியது. ஆனால், நம் நாட்டின் சீதோஷ்ண நிலையில் அவ்வளவு வேகமாகப் பரவாது.”
“எப்போது இந்த வைரஸ் பரவும்? எல்லோருக்கும் தொற்றுமா?”
“பொதுவாக, குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் காலத்தில்தான், எல்லா வைரஸ்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இந்த வைரஸும் அப்படித்தான் பரவும். காற்று மூலம் பரவக்கூடியது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களை இந்த வைரஸ் எளிதில் தாக்கி, கபத்தை உண்டாக்கும். முக்கியமாக, காசநோய் இருப்பவர்களுக்கு உடனடியாகத் தொற்றி, நோயை இன்னும் தீவிரமாக்கிவிடும்.”
“கபசுரக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?”
“மூக்கு, தொண்டை போன்ற மேல் சுவாசப் பாதை (Upper respiratory tract) உறுப்புகளைத்தான் இந்தக் கிருமி முதலில் தாக்கும். எனவே, மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வழிதல், மூக்கடைப்பு, தொண்டையில் தொற்று, தொண்டை வலி எனக் காய்ச்சல் வரை போய் நிற்கும்.”
“சித்த மருத்துவத்தில் இதற்கு மருந்து உள்ளதா?”
“யூகி முனி என்ற சித்தர், காய்ச்சலை 64 வகைகளாகப் பிரித்துள்ளார். உலகிலேயே வேறு எங்கும், இத்தகைய பகுப்பு கிடையாது. இப்போது பன்றிக் காய்ச்சல் என்று சொல்லப்படும் காய்ச்சலுக்கு உரிய தன்மையையும் அதைக் குணப்படுத்துவதற்கு மருந்தையும் கூறியிருக்கிறார். ‘கபசுரக் குடிநீர்’ என்னும் மருந்து, இந்தக் காய்ச்சலைப் போக்கும் என்பது, அவருடைய ‘யூகி வைத்திய சிந்தாமணி’ என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தாகவும், வந்த பின் குணமளிக்கும் மருந்தாகவும் இதைப் பயன்படுத்தலாம்.”
“கபசுரக் குடிநீர் என்றால் என்ன?”
“நிலவேம்புக் கஷாயம் போலவே, இதுவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இந்த மருந்தில் நிலவேம்பும் ஓர் உட்பொருளாகக் கலந்துள்ளது.
நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, அக்ரஹாரம், கண்டுபாரங்கி (சிறு தேக்கு), ஆடாதொடை வேர், சீந்தில், கோஷ்டம், கற்பூரவள்ளி, கோரைக் கிழங்கு உள்ளிட்ட 15 மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துதான் கபசுரக் குடிநீர்.
இந்தத் தூளை 10 கிராம் (2 டீஸ்பூன்) எடுத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து கொதிக்கவைக்க வேண்டும். நன்றாகக் கொதித்து, அரை டம்ளராக வற்றியதும், இறக்கி, வடிகட்டி, காலையிலும் மாலையிலும் உணவுக்கு முன் அருந்த வேண்டும்.
ஒரு முறை செய்துவைத்த மருந்தை, அடுத்த வேளைக்குப் பயன்படுத்தாமல், அவ்வப்போது புதிதாகத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
நோய் வருவதற்கு முன் தடுப்பு மருந்தாகக் குடிக்க நினைப்பவர்கள், 30 மி.லி எடுத்தால் போதும். தடுப்பு மருந்தாக எடுத்துக்கொள்வதென்றால் மூன்று நாட்களும், சிகிச்சையாக எடுத்துக்கொள்வதென்றால் நோயின் தன்மைக்கும் நோயாளியின் தன்மைக்கும் ஏற்ப 15 நாட்கள் வரையிலும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த கபசுரக் குடிநீர், சித்த மருந்துக் கடைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.
டெங்குக் காய்ச்சல் பரவியபோது, நிலவேம்புக் குடிநீர் பற்றிய தீவிர பிரசாரத்தை முடுக்கிவிட்டு, ஊடகங்களில் விளம்பரப்படுத்தியதன் விளைவாக, மக்களுக்கு நல்ல விழிப்புஉணர்வு ஏற்பட்டது. அதேபோல இந்தக் கபசுரக் குடிநீர் பற்றியும் அரசு தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு, ஊடகங்களில் பெரிய அளவு விளம்பரப்படுத்தி, மக்களிடையே பன்றிக் காய்ச்சல் குறித்துப் பரவியுள்ள பீதியைக் குறைக்கவேண்டும். இந்த மருந்தைப் பயன்படுத்தி நோயைத் தடுத்துக்கொள்ள, அரசு முயற்சி எடுக்க வேண்டும்.”
பன்றிக் காய்ச்சல்... என்ன டயட்?
1.வறுத்த அரிசி அல்லது வறுத்த நொய்யில் கஞ்சி செய்து அருந்தலாம். தொட்டுக்கொள்ள, தூதுவளை அல்லது இஞ்சித் துவையல் நல்லது.
2.வடித்த சோற்றில், மீண்டும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி, அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அந்தத் தண்ணீரை வடித்து அருந்தலாம்.
3.குழைய வடித்த சுடு சோற்றில், சுண்டை வற்றல் பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். இட்லிக்கும் இந்தப் பொடியைத் தொட்டுக்கொள்ளலாம். சுண்டை வற்றலைக் குழம்பாகச் செய்து சாப்பிடலாம்.
4.அன்னாசிப் பழம் மிகவும் நல்லது. உணவில் சேர்க்கலாம். பன்றிக் காய்ச்சலுக்கு அரசு வழங்கும் ‘டேமிஃப்ளூ’ மாத்திரைகளில் அன்னாசி கலந்துள்ளது.
5.பால், தயிர் தவிர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், மோர் குடிக்கலாம்.
எளிய - வலிய சில மருந்துகள்!
தொண்டையில் தொற்று, வலி மற்றும் கரகரப்பு ஆரம்பிக்கும்போதே, முன்னெச்சரிக்கையாகத் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சித்த மருந்துக் கடையில், தாளிசாதி வடகம் என்ற மருந்து கிடைக்கும். இதை வாயில் போட்டு, உமிழ்நீருடன் மென்று, தொண்டையில் படும்படி விழுங்கினால், தொண்டைப் பாதிப்பு குறையும்.
மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு இருப்பவர்கள், சிறிது ஓமம், சிறு துண்டு பச்சைக் கற்பூரம், ஒரு சிட்டிகை சுத்தமான மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் நசுக்கி, ஒரு தூய வெள்ளைத் துணியில் முடிந்து, அவ்வப்போது மூக்கில்வைத்து முகர்ந்துகொண்டே இருந்தால், மேலே சொன்ன மூக்குப் பிரச்னைகள் அண்டாது. சுவாசப் பாதையில் நோய்க் கிருமிகள் தொற்றாமல், கவசம் போல காக்கும்.
-திரு.வேலாயுதம்,சித்தமருத்துவர்
http://pettagum.blogspot.in/2015/03/blog-post_6.html


Saturday, July 18, 2015

ஜீவ சமாதி என்றால் என்ன? இது சாத்தியமா?

நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வதேயாகும்
.
ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். ஆனால் நம்மால் எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.இதைத்தான் ஜீவ சமாதி என்கிறோம்.
சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்திவேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது.
உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது.யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார். மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை.
அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். இது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுண்டு. உண்மை தான் ,அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மையாக விளக்கி அருளுவார்கள்.
உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்ட நாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா? என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார்.
ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர். திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு.
ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று தோன்றுகிறது.இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று. இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.
இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
இந்த தனஞ்செயன் என்கிற வாயு மட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ?
அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடி இருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால் தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கி விடுகிறது.
இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால் தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.
சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும்.மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக்கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார்.
வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு. முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார்.
யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள்.
அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்து விடும்

உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?

ந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.

இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் தலைவலி முதல் பிரசவம் வரை வீடுகளிலேயே கை வைத்தியத்தால் பார்த்திருக்கின்றனர். வீட்டில் வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் வைத்து அரைத்து கசாயம் போட்டு கொடுக்க இன்று பாட்டிமார்கள் இல்லை. கஷாயம் குடிக்க மறுக்கும் பேரனை ஓடிப் போய் பிடித்து மடியில் உட்காரவைக்க தாத்தாக்களும் இல்லை. ஆனாலும், தாத்தா, பாட்டிகள் இல்லாத குறையைப் போக்க மூலிகை இருக்கிறது நம்மிடம். 

வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து நெல்லை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசு விளக்குகிறார். “பெரும்பான்மையான வீடுகளில் மூலிகை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்த்து வருகின்றனர். ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை,சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
1. துளசி

துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.
2. தூதுவளை

தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.
3. சோற்றுக்கற்றாழை

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.
4. மஞ்சள் கரிசாலாங்கண்ணி

ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.
5. பொன்னாங்கண்ணி

வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.
6. நேத்திரப்பூண்டு

இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.
7. நிலவேம்பு

நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

8. பூலாங்கிழங்கு

கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.
9. ஓமவள்ளி

கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
10. அருகம்புல்

அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.
11. ஆடாதொடை

எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.
12. பூனை மீசை மற்றும் விஷநாராயணி

இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை பேன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.
13. நொச்சி

நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.
14. தழுதாழை

தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.
15. கழற்ச்சி

இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப் பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்'' என்றார்.

-இ.கார்த்திகேயன்

படங்கள்: எல்.ராஜேந்திரன்