Thursday, October 30, 2014

முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி


செய்முறை விளக்கம்
கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசி குலாவி
நடப்பானே ...
சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.
சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.
நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்,என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும்,ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப்பதால் நடுவில் உள்ள நீர்,நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்து கின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.
வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு -
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு-
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -
இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறையவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.
வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு - -------- சுக்கு
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு--------- இஞ்சி
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -------- கடுக்காய்
இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,
சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.
சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.
சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.
கடுக்காய் சுத்தி ;கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.
இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .
இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.
உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.
மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.
இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.
இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.
பழமொழி :
கடுக்கை உண்டால் மிடுக்காய் வாழலாம்.
ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை
நன்றி !
இமயகிரி சித்தர்..

அத்தி மரம்

பால் முதல் பட்டை வரை... அத்தி மரம்... அத்தனையும் வரம்!
காணக் கிடைக்காதது கிடைத்தால்... அதை 'அத்திப் பூத்தாற்போல’ என்பார்கள். காரணம், அத்தி மரத்தில் பூ பூப்பது, கண்ணுக்குத் தெரியாமல் நிகழும். அத்தி மரத்தின் இலை, பால், பழம், பிஞ்சு, காய், பட்டை என அனைத்துப் பாகங்களுமே மருந்துப் பொருளாகவோ அல்லது துணை மருந்தாகவோ சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. அத்திப் பழத்தை அன்றாட உணவில் ஒரு பகுதியாகச் சேர்த்துக்கொள்ளலாம். நீர்நிலைகளின் அருகாமையில் அதிகம் காணப்படும் அத்தி மரத்தின் மருத்துவக் குணங்கள் குறித்து விவரிக்கிறார் பெரம்பலூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் கோசிபா.
இலை
''உலரவைத்துப் பொடித்த அத்திமர இலைகள் பித்தம் மற்றும் பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்க வல்லவை. காயங்களில் வடியும் ரத்தப்போக்கையும் இதைக்கொண்டு நிறுத்தலாம்.
இந்தப் பொடியில் தயாரித்த லோஷனைக்கொண்டு நாள்பட்ட மற்றும் அழுகிய புண்களைக் கழுவினால் குணம் கிடைக்கும். இதன் இலைகளைக் கொதிக்கவைத்த தண்ணீரால் வாய் கொப்புளித்தால் வாய்ப் புண்கள் ஆறும். ஈறுகளில் சீழ் வடிவதும் குணமாகும்.
பிஞ்சு
கிராமங்களில் அத்திப் பிஞ்சுடன் பாசிப்பயிறு அல்லது துவரம் பருப்பு சேர்த்து சமைத்து உண்பார்கள். இதனால் மூலவாயு, மூலகிராணி, ரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கிவிடும். அத்திப்பிஞ்சுடன் வேலம் பிஞ்சு மாம்பட்டை ஆகியவற்றைச் சம அளவு எடுத்துக்கொண்டு வாழைப்பூ சாற்றில் நீர் சேர்த்துக் கஷாயமாக்கி அருந்துவார்கள். வயிற்றுக்கடுப்புக்கும் சீதக்கழிச்சலுக்கும் இது நல்ல மருந்து.
காய்
பிஞ்சுபோலவே இதையும். நேரடியாகவே உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தலாம். முற்றாத காய்களைத் தேர்ந்தெடுத்தால் சமையல் சுவையாக இருக்கும். பிரமேகம், உட்சூடு, மலக்கட்டு போன்றவற்றையும் நீக்கும்.
பழம்
அத்திப்பழம் மிகச் சிறந்த குருதிப் பெருக்கி. மலமிளக்கியும்கூட. நன்றாக முதிர்ந்து தானாகப் பழுத்து கீழே விழுந்த அத்திப்பழத்தை அப்படியே உண்ணலாம். தேனில் ஊறவைத்து பதப்படுத்தியும் உண்ணலாம். மலக்கட்டையும் பித்தத்தையும் அடியோடு நீக்கும். உண்ட உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து பித்தத்தை வியர்வையாக வெளியேற்றி உடலுக்குச் சுறுசுறுப்பைத் தரும்.
அத்திப்பழத்தை அப்படியே சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் அகலும். நெல்லிக்காய் சாப்பிடுவதுபோல அவ்வப்போது அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் வெட்டை நோய் கிட்டே வராது. அந்த நோய் இருப்பவர்களுக்கு அதன் பாதிப்பை ஆணிவேரோடு அகற்றிவிடும் வல்லமை வாய்ந்தது அத்திப்பழம்.
காட்டு அத்திப் பழத்தில் சிறிதளவு தினசரி ஒரு வேளை உண்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண்குஷ்டம் உள்ளிட்ட தோலின் அனைத்து நிறமாற்றப் பிரச்னைகளுக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கும். வெண்புள்ளிகளைக் குணமாக்க அத்திப்பழத்தைப் பொடி செய்து பன்னீரில் கலந்து பூசலாம்.
மலச்சிக்கல் விலக, வழக்கமான உணவுக்குப் பிறகு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கல் தொந்தரவு தீருவதற்கு இரவுதோறும் ஐந்து பழங்களை உண்டுவர நல்ல குணம் தெரியும். அத்திப் பழங்களை வினிகரில் ஒரு வாரம் வரை ஊறவைத்து தினசரி இரண்டு பழங்களைச் சாப்பிட்டுவருவது போதைப் பழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்துக்கு கைகண்ட மருந்து.
அத்திப்பழத்தில் புரோட்டின், சர்க்கரை, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகள் அதிக அளவில் பொதிந்திருப்பது அறிவியல் ஆராய்ச்சிகளின்படி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதனாலேயே, பலவீனமானவர்களுக்கும் ஜுரத்தில் கிடந்தவர்களுக்கும் உடல் தெம்பாக அத்திப் பழத்தைச் சாப்பிடக் கொடுக்கிறார்கள். பிரச்னை எதுவும் இல்லாவிட்டாலும்கூட, தினசரி இரண்டு அத்திப்பழங்களை உண்டுவந்தால் அது உடல் கவர்ச்சியைக் கூட்டும்.
அத்திப்பால்
அத்தி மரம் முழுக்கவும் அரிவாளால் கொத்தப்பட்ட தழும்புகளைப் பார்க்கலாம். அத்தனையும் அத்திப் பாலுக்காகக் கீறப்படுபவை. சர்க்கரை நோயினால் ஏற்பட்ட பிளவை, கீழ்வாதம், மூட்டு வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு அத்திப்பாலை பத்து போட்டால், விரைவில் குணம் தெரியும். வாத நோய்களுக்கு அத்திப் பாலை வெளிப்பூச்சாகத் தடவலாம். மூலம், பெரும்பாடு, ரத்த மூத்திர நோய்களுக்கு உள் மருந்தாகவும் கொடுக்கலாம்.
பட்டை
அத்திப்பட்டையில் மோர்விட்டு இடித்துப் பிழிந்த சாற்றைத் தொடர்ந்து குடித்துவந்தால், பெண்களைப் படுத்தி எடுக்கும் பெரும்பாடு ஓடிப்போகும். இதையே வேறு முறையில், அத்திப்பட்டையை நன்றாக இடித்து பஞ்சு போன்று மிருதுவாக்கி, சமையலுக்குப் பயன்படுத்தாத பாத்திரத்தில் போட்டு, அரைப் படி நீர் சேர்த்து, எட்டில் ஒரு பங்கு வரும் அளவுக்கு சுண்டக் காய்ச்சுவார்கள். தினசரி மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் இந்தக் கஷாயத்தை குடித்துவந்தால் உதிரப்போக்கு, ஆசனக் கடுப்பு, சீதரத்தபேதி போன்றவை நீங்கும்''.

கற்றாழை!!!!

“பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை”
கற்றாழையின் தாவரவியல் பெயா: “ஆலோவேரா”
(AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.)
கற்றாலை மருத்துவக்குணம் நிறைந்தது சித்தவைத்தியத்தில் இதனை “குமரி” என அழைக்கப்படுகின்றது. இம் முகிலி இருபக்பகமும் சாதுவான முள்போன்ற நீண்ட மேல் நோக்கிய தாள் போன்ற அமைப்பைக் கொண்ட இலைகளை உடையது. இதனை “சுகத்துக்குத் தாழை” என்று கூறுவர் இது காலப் போக்கில் மருவடைந்து “சோற்றுக்கற்றாழை” ஆகிவிட்டது.
தாவரங்கள் பொதுவாக நிலத்திலிருந்து அகற்றியதும் வாடி வதங்கி காலதாமதமானால் இறந்து விடும் ஆனால் சோற்றுக்கற்றாழை நிலத்திலிருந்து அகற்றியதும் இறந்து விடாது வளியில் இருக்கும் ஈரப்பதத்தை ஈத்து வளர்வதுடன் உலர்ந்த தாளிகளின் நீரையும் ஈத்து வளரும் தன்மையுடையது. பொதுவாக கிராமபுறங்களில் வீட்டின் கூரையின் தாள்வாரத்தில் தாள் ஒன்றினை கட்டி விடுவர்கள் அத்தாழை மேல்நோக்கி திரும்பி புதிய குருத்துக்கள் உருவாகி வளர்வதை அவதானிக்கூடியதாகவிருக்கும். இத்தாவரம் ஒவ்வொரு வருடமும் பூக்கொத்தை உருவக்கும். இதன் காரணத்தினாலே இத்தாவரத்தை “வான்குமரி” என அழைப்பதும்முண்;டு.
கற்றாழையின் தாவரவியல் பெயர் “ஆலோவேரா” அல்லது “ஆலோ” என்றும் குறிப்பிடுவர். இதில் இன்னுமேர் வகையும் உண்டு. அது “ஆலோவாவிடன்ஸ்” இவை இரண்டினதும் மருத்துவத் தன்மையும் ஒன்றுதான். இவ் முகிலிகையை நவீன அறிவியல் உலகம் காயகற்ப அதிசய முகிலிகையாக குறிப்பிடுகின்றனர். இதில் இருபதிற்கு மேற்பட்ட அமிலோஅமிலங்கள் உண்டென்று குறிப்பிடுகின்றனர். உடலின் கட்டுமாணப் பணிக்கான புரதச் சத்தின் அடிப்படை அலகுகளை அமிலோ அமிலங்கள் என்று அழைப்பர். இதில் மனித ஆரோக்கியத்துக்குத் தேவையான மிக முக்கிய எட்டு வகை அமிலோஅமிலம் இதில் உண்டு. இந்து இல்லாவிட்டால் உடல் ஆரோக்கியம் குன்றி விடும் எனக்குறிப்பிடுகின்றனர். இதனால் இத் தாவரத்தை முழு மருத்துவக்குணமுள்ள தாவரமாக கருதுகின்றனர்.
கற்றாழை தொர்பாக பார்;க்கும் போது ஒன்று ஆரோக்கியத்துக்குத் தேலையான அமிலோஅமிலங்கள் இருக்கின்றன அடுத்து. அது இன்ரைய அறிவியல் இதனை அழகுசாதனப் பொருட்களுக்கு அடிப்பாடையான பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ரசியநாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் முதுமை அடைந்து இறக்கும் தருவாயில் இருந்த கற்றாலை உணவாக கொடுக்பப்பட்டு; வெள்ளை எலிகளுக்கு கொடுத்து ஆயூட் காலத்தை இருமடங்காக அதிகரித்ததை அவதானித்தாக கட்டுரை வெளியாகியிருந்தது. வெள்ளை எலிகளின் ஆயூட்காலம் முற்பது மாதங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு தழிழ் மெய் உலகம் பல்ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இதை உணர்து இத்தாவரத்துக்கு “குமரி” என பெயர் இயம்பி இழமையை நிலைத்து முதுமையை விரட்டிடும் அற்புதமுகிலிகையாக இயம்பியிருக்கின்றது. மானிடப் பிறவியின் அர்த்தம் புரிந்து மானிடர்க்காக வாழ்ந்த சித்தார்கள் இதை ப்புரிந் திருந்தனர். அனுபவ அறிவால் நுன்மதி நுளை புலத்தால் அவர்களின் தெய்வீக அற்றலால் வெளிப்படுத்தினர்.
தேரையர் பாதார்த்த குணசிந்தாமனியில் குமரியின் மருத்துவ பண்பை “பொல்லா மேகம் கபம் புல் சூலை
குட்டம் ரசம் அல்லார் மந்தம்
பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்
குமரிக்கு மருண்டு”
1.“பொல்லா மேகம்”: இது சக்கரை நோயைக் குறிக்கின்றது. இதனை மேகத்துக்கு ஒப்பிடுகின்றார். மேகமானது தோன்றி மறைவதுடன் திரும்பத் திரும்ப தோன்றுவதும் மேகங்கள் உயர்வதும் தாழ்வதும் அதன் இயக்கையான குணமாமும் இதையொத்த பண்புடையது சக்கரை நோயாகும். இன் நோயைப் போக்கும் தன்மை குமரிக்கு உண்டு.
2.“கபம்”: கபம் என்பது நாசி, தொண்டை, நெஞ்சிப்பகுதியில் சளி கட்டி உடலை உபாதைக்குட்படுத்தும். இதனை கிராமப்புறங்களில் சளிபிடித்தால் சனிபிடித்தமாதிரி என்று இயம்புவதுண்டு அவ்வளவு அவத்தைப்பாடுத்தும். கண்டத்தில் கபம் கட்டி சுவாசத்தை தடை செய்து உடல் இயக்கத்தை நிறுத்தக்கூடிய தன்மையானது கபம். நெருப்பெரிய ஒட்சிசன் தேவை ஒட்சிசன் இல்லாவிட்டால் நெருப்பு அனைந்து விடும். இது போன்றே பிரபஞ்கம் இயங்க பிராணவாயு தேவை. அதுபோன்று உடல் இயங்க ஆத்துமா வாகிய அக்கினி பிரகாசிக்க வேண்டும். அதற்கு பிராணவாயு கண்டத்தின் வழியாக செல்ல வேண்டும். அதை கபம் தடைசெய்யும் இச் சந்தர்ப்பாத்தில் வாயால் சுவாசிக்க நேரும் இதனை “மோவாய் சுவாசம்”என்பர். இது போன்று ஒரு மனிதன் இறப்பதற்கு முன்னர் சுவாசம் நெஞ்கிப்பகுதிக்கு மேல் சுவாசம் இழுத்துக் கொண்டு இருக்கும் இதனை “சேப்பம் கட்டி இழுக்குது” என்பர். சேப்பம் என்பது கபம் இறுதியாக உடலிலிருந்து உயிரை பிரிக்க கபம் உதவுகின்றது. அப்படிபட்ட கபத்தை இல்லாமல் செய்யும் ஆற்றல் குமரிக்குண்டு.
குமரி குளிர்த்தன்மையானது. இது கபத்தை உருவாக்கக்கூடியது எனலாம். இதன் தன்மை கபத்தை இல்லாமல் செய்துவிடும் தன்மையுள்ளது. ஆரம்பத்தில் சளியை ஏற்படுத்தி பின்னர் தெடர்ந்து உண்டுவர நோய் எதிப்புச் சக்தியை உருவாக்கி கபத்தை அடியோடுடொலித்து விடும் சக்தி பெற்று விடும் குமரி. குமரியைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை பொதுவாக கபத்தினால் உண்டாகும் அஸ்டுமா,கடுமையான ஜலதோம், சைனஸ் வருத்தங்கள் உள்ளவர் நிதானத்துடன் தவித்துக் கொள்வது நன்று. பொதுவாக குளிர்சியைத் தரும் தன்மை குமரிக்கு உண்டு. அதேவேளை சளியைத் தடுக்கும் வல்லமையும் குமரிக்கு உண்டு. சிறிது சிறிதாக நாளுக்கு நாள் உணவாக சேர்த்து வர காலப்போக்கில் நோய்எதிப்பு சத்தியைப் பொற்று விடும் உடல் அதன் பின்னர் கபம் தனது சக்தியை இழந்து விடும். வயதானவர்களுக்கு மார்புப் பகுதியில் கபம் கட்டுவது இயல்பு இதனால் உடல் நல்ல திடகாத்திரத்தை இழந்து விடும் அச்சந்தப்பத்தில் குமரியை உணவாக்கி திடகாத்திரத்தைப் பெறமுடியும் எனவே குமரி ஓர் காயகற்ப முகிலிகையாகும.;
3.“புல் சூலை”: உடலில் குடலில் புழுக்கள் ஒட்டுண்ணியாக இருப்பது உடலில் உள்ள சத்துப்பொருட்களை உறுஞ்சி குடித்து தேகாரோக்கியத்தை இழக்கச் செய்வது இயல்பு பல்வேறு நோய்களை ஏற்ப்படுத்தும். இப்படிப்பட்ட புழுக்களை அகற்றும் ஆற்றல் குமரிக்கு உண்டு.
4.“சூலை”: சூலை என்பது கணுக்களில், கபாலத்தில்,வயிற்றில், குடலில் வரும். கணுக்களில் வரும்போது கணுச்சூலை என்றும் கபாலத்தில் ஏற்படுகின்ற போது கபாலைச்சூலை அல்லது சிரசூலை என்றும் குடலில் வருகின்ற போது குடல்சூலை என்றும் இரைப்பையில் வருகின்ற போது சூலை நோய் என்றும் குறிப்பிடுகின்றனர். சூலையின் வேதனை சூலத்தால் குத்துவதை ஒத்தவலியை போன்றது. இது உஸ்னத்தால் உண்டாவது இதை தடுக்கும் ஆற்றல் குமரிக்கு உண்டு. சங்கால இலக்கியம் குமரியின் தன்மையை “குமரியின் சாற்றை உண்டு குடல் புண் ஆறக்கண்டேன்” என்று கூறுகின்றது. கருக்குடலில் இருக்கும் பினிகளுக் கெல்லாம் அருமருந்து குமரி
5.“குட்டம்”: தொழுநோய்யாகிய விரல்கள் அழுகி விழுவதுடன் அங்கங்கள் சுருங்கி ஒலிந்து அபலட்சணத்தை உருவாக்கின்ற கிருமிகளை அகற்றி ஒழிக்கும் ஆற்றல் குமரிக்குண்டு.
6.“ரசம்”: எலும்பு மச்சையை ரசம் என்று அழைப்பதுண்டு எலும்பு மச்சையில் உள்ள சத்துக்கள் குன்றிப்போனால் சிவப்பணுக்களின் உற்பத்தி தடைப்படும் இதன் விளைவால் இரத்தத்தை நரம்பு வளியாக இலுத்துக் செல்லும் பிராணவாயுவின் அளவு குறைவடைந்து நாம் செயல்படும் செயலாற்றல் குறைவடையும் இதனால் இளமையில் முதுமையை எதிர் நோக்க விளையும் அத்துடன் வெளுப்பு நோய்க்கு ஆட்படுவோம். இன்நிலையிலிருந் எம்மை காக்க குமரி ஓர் அருமந்தாகும். இது சிவப்பணு உற்பத்தியை அதிகரித்து எம்மை பலமிக்தாக்கும் தன்மை குமரிக்கு உண்டு.
7.“மந்தம்”: மந்தம் என்பது ஐPரணக்குறைபாடு இயல்பான வேகத்தில் குறைபாடு இதனால் ஏற்படும் அஐPரணம் வயிற்று பொருமலாக இருக்கும் இதன் மூலம் உடலில் அமிலம் சுரந்து அசாதாரன நிலையை ஏற்படுத்தும் இவ்வாறன நிலையிலிருந்து குமரி எம்மைப் பாதுகாக்கும்.
8. “பகம் தரும்”: பகர்தரும் என்பது ஆசன வாசலில் ஏற்படும் புண்ணும் சீளுமான நிலை இதை வயல் வெளியில் சேறும்சகதியுமாக இருக்கும் நிலைக்கு ஒப்பிடுவர். இது மூலநோயின் ஒருவகை இதனால் குத்துகின்றது போன்ற வலியும் எரிச்சலும் கடுப்புடண் கூடிய வலியும் ஆசனவாசலால் இரத்தக்கசிவுள்ள பல பண்புகளைக் கொண்ட மூலரோகம் உழையும் மூலரோகம் எனப்படும். மூலநோய் என்பது பலவகை உண்டு உள்மூலம், வெளிமூலம், உதிரமூலம், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாயில் திறவு இன்னுமோர் மேலதிக பாதை போல் தோன்றும் இயல்பு இதை பவித்திரம் என்பார்கள் இதனை போக்க வவ்லது குமரி.
9.“குன்மம் எல்லாம் விட்டு ஏகும்”: அஐPரனத்தால் ஏற்படும் நோய் குன்மம் இப்படிப்hட்ட நோய்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிடும் எனக்குறிப்பிர்வதுடன்.
10. “அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்”: கிரிச்சரம் என்பது சிறுநீர்த்தாரையில் சிறுநீர் வரும் பாதையில் அரிப்பும் எரிச்சலும் இருந்து அளொகரியத்தை ஏற்படுத்துகின்ற நீர்த்தாரை நோய் இதற்கு குமரி அருமருந்து .
பயன் படுத்தும் முறைகள்:
சோற்றுக்கற்றாழை(குமரி)யின் தொலை நீக்கி சோற்றை எடுத்து அதை ஏழு முறை சுத்மான நீரில் திரும்பத்திரும் புதிய புதிய நீரினால் கழுவி சுத்தம் செய்து அதிலுள்ள அலோயின் என்ற சத்தை நீக்கிவிட வேண்டும். இது கொளுகொளுப்பாக இருக்கும் இதை நீக்கியபின் மருத்து உயயோகத்துக்கு உகந்தாக அமையும். தாழையின் மடலைத் தெரிவு செய்கையில் பின்வரும் விடையங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
1. கற்றாழை மரத்தின் முதிர்வு ஆகக்குறைந்தது ஒன்றரைவருடத்தை பூர்திசெய்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் முழுமையான மருத்துவ பண்புகள் நிறைந்தாக இருக்கும். வேதியல் மூலக்கூறுகளை முழுமையாக பெற்றிருக்கும்.
2. தாழை ஓலை மரத்திலிருந்து வெட்டி எடுத்து அரைமணித்தியாலத்;துக்கும் ஒரு மனித்தியாலத்துக்கும் இடையில் தோலை நீக்கி சுத்தம் செய்தல் உத்தமம். ஆனாலும் நான்கு மணித்தியாலத்துக்கு மேல்படுதலாகாது.
3. சோற்றுப்பகுதியை துண்டுகளாக நறுகி எடுக்கவேண்டும். உண்ண ஆரம்பிக்கும் போது முதலில் அரைச் சதுரடிப் பிரமாணமாக ஒரு வாரமும் இரண்படாவது வாரத்தில் ஒரு சதுரடிப் பிரமாணமாகவும் அடுத்து ஒன்றரை சதுரடி பிரமாணமாகவும் நான்காவது வரத்தில் இரண்டு சதுரடிப் பிரமாணமாகவும் காலையில் வெறு வயிற்றில் உணவு உண்பற்கு அரைமண்த்தியாலயம் முன்தாக உட் கொள்ள வேண்டும். பொதுவாக இரண்டு சதுரடிப் பிரமாணம் கொண்ட ஒரு துண்டில் ஒரு நாளுக்குத் தேவையான சத்துப் பொருட்கள் அணைத்தும் அடங்கியுள்ளது. ஒரு நாளுக்குப் போதுமானதாகும். இத்துன்டுகளை சக்கரை, பணம்கற்கண்டு, கற்கண்டு போன்றவற்றில் போட்டு புறட்டியுட் சுவையுட்டியும் பயன் படுத்தலாம் அல்லது வெறுமனேயும் பயன் படுத்தலாம். குமரியின் பாதப்படுத்திய துண்டுகளை சீலையில் கட்டிதொங்விட்டு சிறுது நேரத்தின் பின் அதை புளிக்கொளம்பாகம் தயார் செய்து உணவாகவும் பயன் படுத்தலாம். அடுத்து இதை குமரியை சாறாக்கி தொடம்பழச்சாறும் சேர்த்து பழரசமாகவும் பயன் படுத்தலாம். லேக்யமாக்கியும் பயன்படுத்தலாம்.
4. இவ்வாறு எடுத்து கொள்வதன் நோக்கம் உடலில் சத்து பொருளைகளை படிப்படியாக சேர்த்துக் கொள்வதே இதன் நோக்கம் இப்படி முறையான செயல் பாட்டுக்கு காரணமாகும்.
5. ஏக்கனவே கபம் அதிமாகி இளை நோய்க்கு ஆளானவர்களும் பினிச நோக்கு ஆளானவர்களுடம் வைத்தியரின் ஆலோசணையுடன் குமரியை உகயோகிக்த் தொடங்குவது சிறந்தது. உகயோகிப்பதானால் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் ஆலோபதி மருந்துடன் சேர்த்து பயன்படுத்தி காலப் போக்கில் ஆலோபதி மருந்துகளை நிறுத்திக் கொள்ள முடியும். பொதுவாக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளல் நன்று.
6. முதுமையால் உண்டாகும் மூட்டுவலி முட்டிவலி மூட்டுக்களில் வழுவின்மை போன்ற நோய்களுக்கு குமரியை தோலுடன் இரண்டு சதுரடி அளவு எடுத்து அதனுடன் இஞ்சி, மஞ்சல் சமனிடை சேர்த்து விழுது போல் அரைத்து சாதுவாக சூடாக்கி மூட்டுகளில் பற்றுப்போல் நன்றாக பூசி காயவிட மூட்டுவலி, வீக்கம் என்பன நீங்கி சுகம் பெறலாம். இது போன்று காலை மாலை பற்றிடலாம்.
குமரி குளிர்மையானது இதை பாவிக்க ஆரம்பிக்கும் போது இது முதலில் கபத்தை உருவாக்கி பின்னர் எதிப்புச் சத்தியை உடலில் ஏற்படுத்தி உடலை கபத்திலிருந்து காத்து ஸ்திரப்படுத்தும். ஆத்துடன் மகரி~p தேரையரின் பாடலில் செப்பிய
“பொல்லா மேகம் கபம் புல் சூலை
குட்டம் ரசம் அல்லார் மந்தம்
பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும் இவை
குமரிக்கு மருண்டு”
அனைத்து பெற்று வழமாய் இளைமையாய் இறை இன்பம் பெற உறுதியா உடல் பொற்று இரண்றற்று ஒன்றாய் அவனுள் அவனாய் உய்வோம். “நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வம்” சித்தர்கள் வாழ்வியலை சிரமேற்று அவர்கள் அடியை பின்பற்றி காயத்தை கற்பமாக்கி வாழ்வாங்கு வாழலாம்!!!
http://lavenkatliked.blogspot.in/

யானை வணங்கியும்,பூனை வணங்கியும்

நான் இப்போது சொல்லப் போவது இரண்டு மூலிகைகளைப் பற்றியது.முதலில் யானை வணங்கியைப் பற்றிப் பார்ப்போம்.
யானை வணங்கி என்பது யானை நெருஞ்சில் என்றழைக்கப்படும் பெருநெருஞ்சில்தான்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்பாடு,பெரும்பாடு என்னும் கடும் உதிரப்போக்கு,சிறுநீரகக் கல்(URINARY COLIC),சிறுநீரகக் கோளாறுகள்(NEPHRITIS),சிறுநீரக வடிகட்டும் வலை அமைப்பு பூராவும் அடைத்துக் கொள்ளும் நிலையில் சிறுநீரகம் சுருங்கிவிடும்,தண்ணீர் நிறைந்து கிடக்க வேண்டிய சிறுநீரகம் கருவாடு போல வற்றிச் சுருங்கும் நிலையே KIDNEY FAILURE, இரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பால் மூட்டுகளில் ஏற்படும் எலும்புத் தேய்மானம்,இவற்றை அடியோடு துடைத்தெரியும் வல்லமை உள்ளது.
யானைகள் கோடைக்காலத்தில் நீர்ப் பற்றாக் குறையால் சரியாகத் தண்ணீர் குடிக்க இயலாததால் யானைகளுக்கு கடும் நீரெரிச்சலும்,கடும் நீர்க்கடுப்பும் வரும்.அப்போது யானைகள் இந்த பெருநெரிஞ்சிலை
தின்று தங்கள் நீர்க்கடுப்பும்,நீரெரிச்சலும் நீங்கி இதை வணங்கிச் செல்வதால் இதற்கு யானை வணங்கி என்றும்,யானை நெருஞ்சில் என்றும் பெயர்.மிருகங்களுக்கு இருக்கும் அறிவு மனிதனுக்கு இல்லையே!
யானை நெருஞ்சிலை காலையில் பழைய சோற்று நீராகாரத்தில் போட்டு அசைத்துக் கொண்டிருந்தால்,சற்று நேரத்தில் நீராகாரம் கஞ்சி போலாகும்.யானை நெருஞ்சிலை எடுத்து வெளியே போட்டுவிட்டு வெறும் அந்த நீராகாரத்தை மட்டும் மூன்று நாள் மட்டும் பருகி வந்தால்,மேலே சொன்ன பிணிகள் அகலும்.
அடுத்து பூனை வணங்கி என்பது குப்பை மேனி என்ற செடிதான்.இதை கசக்கி பூனை அருகில் போட்டால்,பூனை கண்ணை மூடிக் கொண்டு முன்கால்கள் இரண்டையும் கண்களின் மேல் வைத்துக் கொள்ளும்.
ஏனெனில் குப்பை மேனியில் உள்ள கந்தகச் சத்து பூனையின் கண்களுக்கு எரிச்சலைக் கொடுப்பதால் இது அவ்வாறு செய்கிறது.மேலும் இதை எலி போன்ற ஆரோக்கிய குறைவான உணவை உண்டால் அதனால் உண்டாகின்ற நஞ்சு நீங்க பூனை இரவில் சென்று உண்ணும்.அப்போதுதான் பனியால் குப்பை மேனியின் கந்தக வீரியம் குறைந்திருக்கும்.பின் குப்பை மேனியை பூனை வணங்கிச் செல்லும்.எனவேதான் இதற்கு பூனை வணங்கி என்று பெயரிடப்பட்டது.
இதன் வேறு பெயர்கள் அரிமஞ்சரி, அண்டகம், அக்கினிச் சிவன்,பூனை வணங்கி,அனந்தம்,கோழிப் பூண்டு சங்கர புஷ்பி,மேனி
குப்பை மேனி
குப்பை போன்ற போன்ற மேனியையும் பொன்மேனியாக்கும்.எனவே இதன் பெயர் குப்பை மேனி.உப்பையும் குப்பை மேனிச் சாற்றையும் கலந்து,சிறு குழந்தைகளுக்கு வரும் சிரங்கு முதலான வியாதிகளுக்கு மேற்பூச்சாக பூசி வெயிலில் நிற்க வைக்க கொஞ்சம் எரிச்சல் எடுக்கும்.மூன்று நாட்களில் அத்தனை சிரங்கும் கருகி உதிரும்.
ஒரு முறை ஒரு ஆறு மாத குழந்தையை என்னிடம் தூக்கி வந்தார்கள்.அந்தக் குழந்தையின் நுரையீரல் எல்லாம் சளி நிறைந்து இருக்கும் X-RAY படத்துடன் வந்தார்கள்.இந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் 30 நாட்கள் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர் கூறினார்.பணம் ரூ25,000/= எடுத்து வரச் சொல்லி இருக்கிறார்கள் என்றார்கள்.
நான் குப்பைமேனிச் சாற்றை உப்புடன் வைத்துக் கசக்கி 4 சொட்டுகள் மட்டும் எடுத்து,அந்தக் குழந்தைக்கு கொடுக்க 3 நிமிடங்களில் அத்தனை சளியையும் வாந்தியாக எடுத்துவிட்டது. பொதுவாகவே,பெரியவர்,சிறியவர் என்ற பேதமில்லாமல்,X-RAY படம் அதிகம் எடுக்கக் கூடாது.அதிலும் சிறு குழந்தைக்கு சில தடவைகள் கூட எடுக்காதீர்கள்,அது இரத்தச் சிவப்பணுக்களை கொல்லும்,என்று கூறி அனுப்பினேன்.
மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு X-RAY எடுத்துப் பார்த்தோம்.நீங்கள் கூறியது போல சளி குறைந்திருக்கிறதா? என்று பார்த்தோம்.படத்தில் குறைந்துவிட்டது என்று தெரிந்து கொண்டோம்.மிக்க நன்றி என்றார்கள்.நான்தான் X-RAY எடுக்க வேண்டாம் என்றேனே? அவர்கள் சரியானதை உறுதிப்படுத்த எடுத்ததாகக் கூறினார்கள்.மக்களின் அறியாமையை எண்ணி எனக்குள் நொந்து கொண்டு அவர்களை அனுப்பி வைத்தேன்.
நன்றி :- திரு.சாமீ அழகப்பன் @ மச்சமுனி.காம்

அனுபவ வைத்தியம் - 1

வாதம்-பித்தம்- கபம் என்ற மூன்று குணங்களே நமது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன .வாதம் அதிகரித்தால் உடல் வலி- பித்தம்அதிகரித்தால் கிறுகிறுப்பு ,வாந்தி, தூக்கம் இன்மை , கபம் அதிகரித்தால் சளித்தொந்தரவு .
இந்த மூன்றையுமே கட்டுப்பாட்டில் வைக்கும் அற்புத மூலிகை பிரண்டை. இளம் பிரண்டையை நன்கு வதக்கி, அத்துடன் மிளகாய் ,காயம் ,உளுந்தம் பருப்பு வறுத்து வைத்துப் புளி,உப்பு சேர்த்துத் துவையல் அரைக்கவும்.இது இட்லி,தோசை,மோர் சாதம் ஆகியவற்றுக்கு சிறந்த கூட்டணி -சாதத்தில் பிசைந்து எண்ணெய் விட்டு சாப்பிடலாம் .
வாய்வு-பித்தம்-கபம் அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை இது.இதனை வாரம் ஒருமுறை சாபிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும்.எனவேதான் பண்டைய நாளில் அப்பளம் செய்யும் போது பிரண்டைச் சாறு சேர்த்துச் செய்தார்கள் .உணவே மருந்து என்று உண்டார்கள் வென்றார்கள்.
http://lavenkatliked.blogspot.in/
(குறிப்பு :- பிரண்டைத் துவையலை அரைத்த உடன் தின்றால் நாக்கில் சுரசுரப்பு/அரிப்பு ஏற்படும்.அடுத்தநாள் உபயோகித்தால் சுவை கூடும்)

வாதம்-பித்தம் -கபம்

”எதைத் தின்னால் இந்த ’பித்தம்’ தெளியும்? ஒருவேளை ’வாதக்’க் குடைச்சலாய் இருக்குமோ? நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு...”,என்கிற வசனங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கொழிந்து வருகிறது. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இவ்வரிகள் ரொம்ப முக்கியமானவை. இன்னும்கூட நம் பாட்டி தாத்தா இப்படிப் பேசிக் கொள்வதை, கிராமங்களில் மருத்துவரிடம் தம் நோயை அவர்கள் இப்படிச் சொல்வதை பார்க்க முடியும். நாகரீக அனாதைகளாகி வரும் இளையதலைமுறையான, இன்றைய ’கூகிள்’ தலைமுறைக்கு, இது புதுசு. லூலூபி பாடுவதில் இருந்து, வெண்பொங்கலுக்கு மிளகை எப்போ போடணும்?, மயிலாப்பூர்ல ஏழு சுத்து கை முறுக்கு எங்கே கிடைக்கும் –ங்கிற வரை எல்லாத்தையுமே கம்ப்யூட்டரில் தேடும் அவர்கட்கு இந்த ”வாதம் பித்தம் கபம்” எனும் வார்த்தைகள்- வரிவிலக்கு பெற்று வந்திருக்கும் தமிழ்ப் பட டைட்டிலோ என்று மட்டுமே யோசிக்க வைக்கும்.
”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. அப்ப அதல்லாம் சித்தா ஆயுர்வேத டாக்டர்கள் சமாச்சாரமாச்சே.. நமக்கெதுக்கு? என நகர வேண்டாம். இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பு இருந்திருந்தது. ”ஐய்யோ..ஐஸ்கிரீமா? த்ரோட் இன்ஃபெக்‌ஷனாயிடும்! ரோட்டோர பரோட்டாவா..அமீபியாஸிஸ் வந்துடப் போகுது,” என்ற அறிவை வளர்க்கும் நாம், “உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும். மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது”-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவை இந்த வாரம் கொஞ்சம் இப்படி தீட்டுவோமா?.
”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது. கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. இந்த மூன்று வாத பித்த கபமும் சரியான கூட்டணியாய் பணிபுரிந்தால் உடம்பு எனும் பார்லிமெண்ட் ஒழுங்காய் நடக்கும். ஒண்ணு ”காமன் வெல்த்”திலும்-இன்னொன்று அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் சேட்டை செய்தால்- ஒரே நோய்களின் கூச்சலும் குழப்பமும் தான் உடம்பு பார்லிமெண்ட்டில் ஓடும்.
இந்தக் கூட்டணி ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட கூட்டணிப் பணிக்கு அவசியமானது. ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். வாதத்தைக் கூட்டும் உணவை காசியில் விட்டு விடலாம். புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும். மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உனவ்பில் சேர்ப்பது வாத்தை குறைத்திட உதவும்.
பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் பெரிசு. இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். அரிசி அந்த விஷயத்தில் சமத்து.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) சாப்பிடணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என் இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரனமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பழு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.
ஆதலால் சந்தோஷம் கால்படி, சிரிப்பு அரைப்படி போட்டு, அதில் கண்டிப்பாய்“ நான்”-கிள்ளி நீக்கிப் போட்டு, விட்டுக்கொடுத்தலில் வேகவைத்து புன்னகையில் தாளித்தெடுத்து காதலோடு பரிமாறுங்கள். பித்தமென்ன மொத்தமும் அடங்கும்.
அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள்.மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.
வாத பித்த கபம்-இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியை அச்சுபிச்சு இல்லாமல் காப்பதில், சமையல்கூடத்திற்கு சந்தேகமில்லாமல் பங்கு உண்டு.அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. அதனை மடமை என்றோ பழசு என்றோ ஒதுக்குவது முட்டாள்தனம். அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது. இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!
http://lavenkatliked.blogspot.in/

தொண்டையில் சதை வளர்ச்சி:

தொண்டையில் வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டைக் கரகரப்பு, இருமல், காதுவலி, அடிக்கடி காய்ச்சல் இவை தொண்டையில் சதை வளர்ச்சியின் அறிகுறிகள். இது முற்றினால் (டான்சில்), அறுவை சிகிச்சை வரை சென்றுவிடும். இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்கும் நோய் இதை நீக்க எளிய சிகிச்சை காண்போமா?
ஒரு துண்டு பப்பாளிக்காயை அம்மியில் நசுக்கிச் சாறு எடுக்கவும். ஒரு சிறிய கரண்டி அளவு சாறும் அதே அளவு தேனும் கலந்து தொண்டைக்குள் (டான்சில்) தடவி வந்தால் எச்சிலாக ஊற்றித் துர்நீர் வெளியாகி வீக்கம் வடிந்துவிடும் மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை இன்றியே முற்றிலும் குணமாகிவிடும் இதைக் குழந்தைகளுக்கும் உபயோகிக்கலாம். வாயில் அடிக்கடி ஒரு சொட்டு மேற்படிச் சாற்றை விட்டு மெல்ல விழுங்கச் செய்யலாம்.
http://lavenkatliked.blogspot.in/

Wednesday, October 29, 2014

தமிழ் மூலிகை அருஞ்சொற்பொருள் !

தமிழ் மூலிகை அருஞ்சொற்பொருள்/TAMIL HERB GLOSSARY
*A - வரிசை
ABELMOSCHUS ESCULENTUS - வெண்டை
ABELMOSCHUS MOSCHATUS - கந்துகஸ்தூரி
ABIES WEEBBIANA - தாலிசப்பத்திரி
ABRUS FRUITILOCULUS - வெண்குந்திரி, விடதரி
ABRUS PRECATORIUS - குண்றிமணி
ABULITUM INDICUM - துத்தி
ACACIA ARABICA - கருவெல்லம்
ACACIA CONCUNA - சீக்காய், சீயக்காய்
ACACIA PENNATA - காட்டுசிகை, இந்து
ACACIA POLYACANTHAPOLYCANTHA - சிலையுஞ்சில்
ACALYPHA INDICA - குப்பைமேனி
ACALYPHA PANICULATA - குப்பைமேனி
ACHYRANTHES ASPERA - நாயுருவி
ACORUS CALAMUS - வசம்பு
ADATHODA TRANQUEBARIENSIS - தவசு முருங்கை
ADENAN THERA PAVONIA - மஞ்சாடி, ஆனைக்குன்றுமணி
AEGLE MARMELOS - வில்வம்
AGAVE AMERICANA - ஆனைக் கற்றாழை, யானைக் கற்றாழை
AGAVE SISALANA - கதலை
AILANTHUS EXCELSA - பெருமரம், நாரு
ALANGIUM LAMARCKII - அழிஞ்சில்
ALANGIUM SALVIIFOLIUM - அழிஞ்சில்
ALBIZIA LEBBECK - வாகை
ALBIZIA ODORATISSIMA - கருவாகை
ALFALFA - குதிரைமசால்
ALOE BARBADENSIS - சீமை மூசம்பரம்
ALOE LITTORACIS - மூசம்பரம்
ALOE VERA - சோத்துக் கற்றாழை
ALONITUM HETEROPHYLLUM - அதிவிடயம்
ALTERNANTHERA SESSILIS - பொன்னாங்கண்ணி
ALPINIA GALANGA - அரத்தை
AMARANTHUS SPINOSUS - முள்ளுக்கீரை
AMARANTHUS TRICOLOUR - அரைக்கீரை
AMMNIA VESICATORIUS - நீர்மேல் நெருப்பு
AMOMUM SUBLATUM - பெரிய ஏலக்கி
AMORPHOPHALLUS SYLVATICUS - காட்டுச்சேனை
ANACORDIUM OCCIDENTALE - முந்திரி
ANETHUM SOWA - சதகுப்பை
ANIMATED OATS - (காட்டுக்) காடைக்கண்ணி
ANISOCHILUS CARNOSUM - கர்ப்பூரவள்ளி
ANISOMELES MALABARICA - பேய்மிரட்டி
ANNONA SQUAMOSA - சீத்தா
APONOGETON NATANS - கொட்டிக்கிழங்கு
AQUILARIA AGALLOCHA - அகில், காகதுண்டம்
ARISTIDA SETACEA - துடைப்பம்
ARISTOLOCHIA BRACTIATA - ஆடுதீண்டாப்பாளை
ARUM LYRATUM - கொண்டை ராகிசு
ARUM OOLOCASIA - சேம்பு
ASPARAGUS RACEMOSUS - தண்ணீர்விட்டான் கிழங்கு
ASYSTASIS GANGETICA - நறுஞ்சுவைக் கீரை
ATALANTIA MONOPHYLLA - காட்டு எலுமிச்சை
AVENA SATIVA - (சீமைக்) காடைக்கண்ணி
AVENA STERILLIS - (காட்டுக்) காடைக்கண்ணி
AUDIOGRAPHUS PANICULATA - நிலவேம்பு
AZADIRACTA INDICA - வெம்பு
AZIMA TETRACANTHA - முட்சங்கான்
***
*B - வரிசை*
BAMBUSA ARUNDINACEA - மூங்கிலிரிசி
BARINGTONIA ACUTANGULA - செங்கதப்பு
BARINGTONIA RACEMOSA - சமுத்திரப் பழம்
BARLENIA PRIONTIS - செம்முல்லி, காட்டுகானா
BARLERIA CRISTATA - செம்முள்ளி
BASELLA ALBA - பசளைக் கீரை
BASELLA RUBRA - கொடிப்பசளைக் கீரை
BAUHINIA TOMENTOSA - இறுவாட்சி
BERBERIS ARISTATA - மரமஞ்சள்
BIXA ORELLANA - வருகமஞ்சள், மந்திரவஞ்சி
BLUMEA LACERA - காட்டுமுள்ளங்கி
BOERHAVIA DIFFUSA - மூக்குரட்டை
BORASSUS FLABELLIFER - பனை
BOVERHEAVIA REPEN - மூக்கரத்தைக் கீரை
BROYONIA LACINIOSA - ஐவிரலி
BUCHANANIA AXILLARIS - புளிமா
BULLETWOOD - மகிலா மரம்
BUREA FRONDOSA - பலசு
***
*C - வரிசை*
CAESALINA PULCHERRIMA - மயில்கொன்றை
CALABA FRUITCOSA - விழுந்தி
CALAMUS ROTANG - பிறப்பான் கிழங்கு
CALCULUS BOVIS - கோரோசனை
CALOTROPIS GIGANTEA - எருக்கன், அருக்கன், ஆள்மிரட்டி
CAMMELINA BENGHALENSIS - கானாம்வாழை
CANNABIS SATIVA - கஞ்சா, ஆநந்தமூலம்
CANTHIUM PARVIFOLIUM - சிறுக்காரை
CAPPARIS BREVISPINA - ஆதந்தை
CAPPARIS HORRIDA - ஆதொண்டை
CAPPARIS ZEYLANICA - சுடுத்தொரட்டி
CAPSIUM ANNUM - மிளகாய்
CAPSIUM MINIMUM ROCH. - சீமை மிளகாய்
CARALLUMMA UMBELLATA - கல்முளையான்
CARDIOSPERMUM HALICACABUM - முடக்கற்றான்
CARMONA RETUSA - குரங்கு வெற்றிலை, குருவிச்சிப்பழம்
CARRISSA CARANDAS - களா, கிளா
CARRISSA SPINARUM - சிறுக்களா
CARUM ROXBURGHIANUM - ஓமம்
CASSIA ALATA - சீமையகத்தி
CASSIA ANCEOLATA - நிலாவாரை
CASSIA AUGUSTIFOLIA - நாட்டு நிலவாகை
CASSIA AURICULATA - ஆவாரை
CASSIA FISTULA - சிறுக்கொன்றை
CASSIA TORA - தகரை
CATHARANTHUS ROSEUS - நித்தியகல்யாணி
CENTELLA ASIATICA - வல்லாரை
CEPPARIS ZEYLANICA - ஆதொண்டை
CHESTNUT - கஷ்கொட்டை
CINNAMOMIUM MACROCARPUM - பெரிய லவங்கப்பட்டை
CISSUS QUADRANGULARIS - பிரண்டை
CISSUS REPENS - செம்பிரண்டை
CITRON - கடார நாரத்தை
CITRUS ACIDA - எளிமிச்சை
CITRUS MEDICA - கடார நாரத்தை
CITRULLUS COLOCYNTHIS - ஆற்றுத்தும்மட்டி
CLEMONE GYRANDRA - நிலவேளை
CLEMONE VISCOVA - வேளை
CLEOME VISCOZA - நாய்க்கடுகு
CLERODENDRON INERME - சங்கம் குப்பி
CLERODENDRON PHLOMOIDES - தழுதாரை
CLERODENDRON SERRATUM - கண்டுபரங்கி
CLERODENDRON PHLOMOIDES - தழுதாரை
CLIMBING YLANG YLANG - கருமுகை
CLOVER - சீமை மசால்
CLITORIA TERTATEA - கண்ணிக்கொடி
COCCINIA GRANDIS - கோவை
COCCULUS HIRSUTUS - காட்டுக்கொடி
COCUS NUCIFERA - தென்னை
COLEUS AROMATICOS - கற்பூரவல்லி
COLEUS FORSKOHLII - மருந்துகூர்க்கன்
COLOCASIA HIMALENSIS - சாமைக்கிழங்கு
COPORIS ZEYLANICA - ஆதண்டம்
CORDIA DICHOTOMA - நறுவிலி, மூக்குச்சளிப் பழம்
COROLLO CARTUS - ஆகாயக் கருடன்
CORYPHA - குடைப்பனை
CUCUMIS MELO UTILISSIMUS - முள்வெள்ளரி
CUCUMIS MELO VAR. MELO - சுக்கங்காய்
CURCULIGO ORCHIODES - குறத்தி நிலப்பனை
CURCUMA AROMATICA - கஸ்தூரி மஞ்சள், கத்தூரி மஞ்சள்
CURCUMA LONGA - மஞ்சள்
CUSCUTTA - கஷ்கொட்டை
CYCLOMEN EUROPEUM - சீமை மீன்கொல்லி
CYMBOPOGON CITRATUS - எலுமிச்சைப்புல்
CYNODON DACTYLON - அருகம்புல்
CYPERUS ROTUNDUS - கோரைக்கிழங்கு
***
*D - வரிசை*
DANDELION - சீமைக் காட்டுமுள்ளங்கி
DATURA METEL - ஊமத்தை
DECALEPIS HAMILTONII - மாகாளிக்கிழங்கு
DELONIX ELATA - வாத நாராயணன்
DESMODIUM GANGETICUM - மூவிலை
DIASCOREA PURPUREA - செவ்வள்ளிக் கொடி
DITA BARK - எழிலைப்படை
DIOSPYROS EBENUM - கருங்காலி
DIOSPYROS EMBRYOPYERIS - தும்பிலிக்காய்
DIOSPYROS FERREA - இறும்பிலி
DIOSPYROS MELANOXYLON - தும்பிலி
DIOSPYROS PEREGRINA - பனிச்சை
DOG MUSTARD - வேளை
***
*E - வரிசை*
ECLIPTA PROSTRATA ROXB. - கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசாலை
ELUESIN CORORANA GAERTH - கேழ்வரகு
EMBELIA RIBES BURN. - வாய்விலங்கம்
ERYTHRINA INDICA - கல்யாண முருங்கை
EUGENIA JAMBOLANA - நாவல்கொட்டை
EULOPPIA CAMPESTRIS WALL - சாலமிசிரி
EUPHORBIA HETROPHYLLA - பால்பெருக்கி
EUPHORBIA HIRTA - சித்திரப்பாலாடை
EUPHORBIA LIGULARIA ROXB. - இலைக்கள்ளி
EUPHORBIA NIVULLIA LAM. - மண்செவிக்கள்ளி
EUPHORBIA THYMEFOLIA - அம்மன் பச்சரிசி
EUPHORBIA TIRUCALLI LINN. - கள்ளி
EVOLVOLUS ALSINODES - விஷ்னுக்கிரந்தி
EXECALIA AGALLICHA LINN. - தில்லி
***
*F - வரிசை *
FEVER NUT - சலிச்சிகை
FICUS BENGHALENSIS - ஆலம்
FICUS ELASTICA - சீமையால்
FICUS RACEMOSA - அத்தி
FLACOURTIA INDICA - சொத்தைக்களா
FLUGGEA VIROSA - வெட்புலா
***
*G - வரிசை *
GALENIA ASIATICA - உகாய்
GARDENIA RESINIFERA - கும்பிலி
GARNICIA CAMBOGIA - கொறுக்காய்ப்புளி
GARNICIA GUMMI-GUTTA - பனம்புளி
GARNICIA INDICA - முருகல்
GARNICIA SPINATA - கோகொட்டை
GARUGA PINNATA - ஆறுநெல்லி, கருவெம்பு
GAUZUMA ULMIFOLIA - தேங்காய்
GELORIUM ANGUSTIFLORA - வரித்தோல்
GENDURASA VULGARIS - கருநொச்சி
GINSENG - குணசிங்கி
GISEKIA PHARNACEOIDES - நாவமல்லிக் கீரை, மணலக் கீரை
GLOREOSA SUPERBA - கலப்பைக்கிழங்கு, கண்வலிக்கிழங்கு
GLYCOSMIS MAURITANIA - கொஞ்சி
GOTU KOTA - வல்லாரை
GOVERNOR'S PLUM - சொத்தைக்களா
GUM BENZOINE - தூபவர்க்கம்
GYMNEMA SYLVESTRE - அமுதுபுஷ்பம், சிறுகுறிஞ்சான்
***
*H - வரிசை *
HIBISCUS - செம்பருத்தி
HALARRHENA ANTIDYSENTERIA - குளப்பாலை, குடசப்பாலை
HEDYCHIUM SPICATUM - பூலங்கிழங்கு
HELICLERIS ISORA - வலம்பிரி
HELIOTROPIUM INDICUM - தேள் கொடுக்கி
HELIOTROPIUM KERALENSE - தேள் கட்டை
HEMIDESMUS INDICUS - நன்னாரி
HIBISCUS SURATTENSIS - புளிச்சைக்கீரை, காட்டுப்புளிச்சை
HIBISCUS VITIFOLIUS - மணித்துத்தி
HOLOSTEMMA ADA-KODIEN - பலைக்கீரை
HYBANTHUS ENNEASPERMUS - ஓரிதழ் தாமரை
HYDNOCARPUS ALPINA - ஆத்து சங்கலை
HYGROPHYLIA AURICULATA - நீர்முள்ளி
***
*I - வரிசை *
IMPALIENS BALASAMINE - காசித்துப்பை
INTERMEDLAR TREE - மகிலா மரம்
IODINIUM SUFFRUTICOSIUM - ஓரிதழ்த் தாமரை, சூரியகாந்தி
IPOMEA CARNEA - நெய்வேலி காட்டாமணக்கு
IPOMEA QUAMOCLIT - மயிர் மாணிக்கம்
IPOMEA SEPIARIA - தாலிக்கீரை
***
*J - வரிசை *
JANAKIA ARAYALPATHRA - அமிர்தபலா
JATROPHA GOSSIPIPHOLIA - முள்கத்திரி
***
*K - வரிசை *
KAEMPFERIA GALANGA - கச்சோளம்
KINGIODENDRON PINNATUM - மடையன் சாம்பிராணி
KIRAGANELIA LINEATA - நீர்ப்பாளை
KIRAGANELIA RETICULATA - புல்லந்தி
KNEMA ATTENUATA - சோரப் பத்திரி, சூரியப் பத்திரி
***
*L - வரிசை *
LAMPRACHAENIUM MICROCEPHALUM - பிரம்மதந்தி
LANTANA CAMARA - உன்னிச்செடி
LAWSONIA INERMIS - மருதாணி
LEMONGRASS - எலுமிச்சைப்புல்
LEPISANTHES TETRAPHYLLA - குகமதி
LEUCAS ASPERA - தும்பை
LIPPIA NODIFLORA - பொட்டுத்தலை
LONG LEAVED BARLERIA - கோல்மிதி
LOVE VINE - கஷ்கொட்டை
LUFFA ACUTANGULA - பெருபீர்க்கம்
***
*M - வரிசை*
MADHUCA LONGIFOLIA - நாட்டிலுப்பை
MADHUCA NERIIFOLIA - ஆத்து இலுப்பை
MALABAR GLORY LILY - கலப்பைக் கிழங்கு
MANILKARA HEXANDRA - கணுப்பலா, காட்டுப்பலா
MARSILIA - நீராரை
MARSILIA QUADRIFIDA - ஆரை
MEMECYLON TINCTORIUM - காயா
MEMECYLON UMBELLATUM - காசன்
MICHELIA CHAMPALA - செண்பகம்
MICHELIA NILAGIRICA - காட்டுச் செண்பகம், நீலகிரி செண்பகம்
MILLINGTONIA HORTENSIS - மர மல்லிகை
MIMUSOPS ELENGI - மகிழம்பூ
MORINDA LINCTOSA - நுணா, நுணவு
MORINGA CONCANENSIS - காட்டு முருங்கை
MUCUNA PRURIENS - பூனைக்காலி
MUKIA MADERASPATANA - முசுமுசுக்கை
MURRAYA KOENIGII - கருவேப்பிலை
MUSA SAPIENTUM - நவரை
MYRISTICA DACTYLOIDES - காட்டு ஜாதிக்காய், காக்காய் மூஞ்சி
MYRISTICA MALABARICA - பத்திரி
MYROXYLON BALSAMUM - சாம்பிராணி
MYRRH - வெள்ளைப்போளம்
***
*N - வரிசை*
NARDOSTATHYS GRANDIFLORA - ஜாதமாசி, ஜாதமஞ்சி
NERVILIA ARAGOANA - ஓரிலைத் தாமரை
NELUMBO NUCIFERA - தாமரை
NIGELLA SATIVA - கருஞ்சீரகம்
NILGIRIATHUS CILIATUS - சின்னக் குறிஞ்சி
NUX VOMICA - எட்டிமரம்
NOTHAPODYTES NIMMIONANA - அரளி, பெரும்புளகி
NYCTANTHES ARBOR-TRISTIS - பவழமல்லிகை
***
*O - வரிசை*
OATS - காடைக்கண்ணி
OCHREINAUCLEA MISSIONIS - ஆத்து வஞ்சி, நீர் வஞ்சி
OCIMUM BASILICUM - திருநீற்றுப் பச்சிலை
OCIMUM TENUIFLORUM - துளசி
OPERCULINA TURPETHUM - சிவதை, பகந்திரை
OPUNTIA STRICTA VAR. DILLENII - சப்பாத்திக்கள்ளி
ORCHUS MASOULA - சாலாமிசிரி
ORMOCARPUM SENNOIDES - எலும்பொத்தி
OROXYLUM INDICUM - அச்சி
OXALIS CORNICULATA - புளியாரை
***
*P - வரிசை*
PALAQUIN ELLIPTICUM - காட்டிலுப்பை
PANDALUS ADORATTISIMUS - தாழை
PANICUM MILIACUM - பணிவரகு
PANICUM MILLIARE - சாமை
PAVETTA INDICA - பாவட்டை
PEARL MILLET - கம்பு
PEDALIUM MUREX - பெரு நெருஞ்சில், யானை நெருஞ்சில்
PERSEA MACRANTHA - கூலமாவு, கோலமாவு
PHOENIX LOUREIRII - சிறு ஈச்சன்
PHOENIX PUSSILA - தரை ஈச்சன்
PHYLANTHUS AMARUS - கீழாநெல்லி
PHYLANTHUS EMBLICA - நெல்லி
PHYLANTHUS FRATERNUS - கீழாநெல்லி
PHYLANTHUS RETINUS - மெலநெல்லி
PHYLANTHUS VIROSA - இருபுலை
PIAMELOMANIA AROMATICA - தீர்க்கந்தை
PIPER BARBERI - காட்டு மிளகு
PIPER LONGUM - ஆதிமருந்து, திப்பிலி
PIPER MULLESUA - காட்டுத் திப்பிலி
PIPER NIGRUM - குறுமிளகு
PITHECELLOBIUM DULCE - கொடுக்கப்புளி
PONGA PINNIATA - புங்கை
PONTEDERIA VAGINDIS - குவளை
PREMNA CORYMBOSA - கூழாமணிக்கீரை, முன்னை
PREMONTHES SONCHIFOLIA - சுவர்முள்ளங்கி
PSEUDARTHRIA VETTIVEROIDES - கறுவேர்
PSEUDARTHRIA VISCIDA - மூவிலை பச்சிலை
PSORALIA CORYLIFOLIA - கார்போக அரிசி
PTEROCARPUS SANTALINUS - செங்குங்குமம், சிவப்பு சந்தனம், சந்தன வெங்கை
PUERARIA TUBEROSA - கரிக்கும்மடி
PUNCTURE PLANT - நெறிஞ்சி
PURPLE MALLOW - ஒட்டத்தி
***
*R - வரிசை*
RAUVOLFIA SERPENTIA - சர்பகந்தி
RHAPHIDOPHORA PERTUSA - ஆனைப்பிரண்டை
RHUS SUCCEDENEA - கர்க்கடசிங்கி
RIBBER GOURD - பெருபீர்க்கம்
ROSARY PEA - குண்றிமணி
RYE - புல்லரிசி
***
*S - வரிசை*
SAGITTARIA OBTUSIBOLIA - குதிரைக் குளம்படி
SALACIA OBLONGA - பொங்கொரந்தி
SALVADORA PERSICA - உகாய்
SANTALUM ALBUM - சந்தனம்
SAPIUM INSIGNE - கருப்புச்சுடை
SARACA ASOKA - அசோக மரம்
SARACA DINDICA - அசோகம்
SARAVASTA ARISTAM - சடாமஞ்சில்
SARCOSTEMMA INTERMEDIUM - கொடிக்கள்ளி
SAUSUREA COSTUS - கொட்டம்
SAW PAMETTO - சீமைக்கதலை
SCINDAPUS OFFICINALIS - யானைத்திப்பிலி
SCOPARIA DULCIS - சர்க்கரை வெம்பு
SECALE CEREALE - புல்லரிசி
SECURINEGA LEUCOPYRUS - மட்புலந்தி, வெள்ளைப்புலா
SECURINEGA OBOVETA - வேப்புலந்தி
SECURINEGA VIROSA - புலா
SEHREBERA SWIENTENOIDES - மகாலிங்க மரம்
SEMECARPUS TRAVANCORICA - காட்டுச்செங்கொட்டை
SENNA AURICULATA - ஆவாரை
SESBANIA GRANDIFLORA - அகத்தி
SHOREA TUMBUGGAIA - தம்பகம்
SIDA ACUTA - வட்டத்திரிப்பி
SIRIS TREE - வாகை
SMILAX ZEYLANICA - காட்டுக்கொடி
SOLANUM ERIANTHUM - யானை சுண்டைக்காய்
SOLANUM INDICUM - முள்கத்திரி
SOLANUM NIGRUM - மனத்தக்காளி
SOLANUM TORVUM - சுண்டை(க்காய்)
SOLANUM TRILOBATHUM - தூதுவளை
SPREADING HOG WEED - மூக்கரத்தைக் கீரை
SPIRANTHES CALVA - ஆங்காரவள்ளி
SPONDIAS PINNATA - நரிமங்கை
SUREGADA ANGUSTIFLORA - படபட்டை
SWEET FLAG - வசம்பு
SWERTIA CHIRAYITA - சிரத்தைக்குச்சி
SWERTIA CORYMBOSA - சிரத்தை
STERCULIA FOETIDA - குதிரைப்பிடுக்கான்
STREBLUS ASPER - குட்டிப்பலா
STYRAX BENZOIN - மலக்காச் சாம்பிராணி
SWEET BROOM - சர்க்கரை வெம்பு
SYMPLOCOS RACEMOSA - வெள்ளிலாதி
SYZEGIUM CUMINA - நாவல்
SYZYGIUM JAMBOLANUM - நாவல் கொட்டை
***
*T - வரிசை*
TAMARANDUS INDICA - புளி(யான்)
TAXUS BUCATA - தாலிசபத்திரி
TERMINALIA ARJUNA - மருதமரம்
TERMINALIA BELERICA - தான்றிக்காய்
TERMINALIA CHEBULA - கடுக்காய்
THICK-LEAVED LAVENDER - கர்ப்பூரவள்ளி
TINOSPORA CARDIFOLIA - சீந்தில் கொடி
TINOSPORA SINENSIS - பேய் அமுது
TOOTHBRUSH TREE - உகாய்
TRAGIA BICOLOR - மலைச் செந்தத்தி
TRAGIA CANNABINA - தூரலோபம்
TRAGIA INVOLUCRATA - தூரப்பரிகம்
TRAGIA PLUKENETTI - சிறுகாஞ்சொரி
TRIANTHEMA ECANDRA - சத்திச்சாரணை
TREWIA NUDIFLORA - அத்தரசு, நாய்க்குமுளி
TRIANTHEMA ECANDRA - சத்திச்சாரணை
TRIANTHEMA PENTANDRA - சாரணை
TRIBULLUS TERRESTRIS - நெறிஞ்சி
TRICHOPUS ZEYLANICUS - ஆரோக்கியப் பச்சை
TRIGONELLA FOENUM - வெந்தையம்
TRIUMFETTA RHOMBOIDA - காட்டுவெண்டை
***
*U - வரிசை*
ULTERIA SALICIFOLIA - உத்லீர்
URENA LOBATA - ஒட்டத்தி
***
*V - வரிசை*
VATERIA INDICA - வெள்ளைக் குந்திரிகம்
VATERIA MACROCARPA - வெள்ளைப் பயின்
VERBACIFOLIUM SOLANUM - சுண்டை
VIGINEA INDICA - காட்டுவெங்காயம்
VITEX NEGUNDO - நொச்சி
VITIS LANATA - நரளை
***
*W - வரிசை*
WATER HYACINTH - ஆகாயத் தாமரை
WATER SHAMROCK - நீராரை
WATTAKARA VOLUBILIS - குரிஞ்சான்
WEDELIA CALENDULACEA - பொன்னிரைச்சி
WEDELIA CHINENSIS - மஞ்சள் கரிசாலி
WESTINDIAN LEMONGRASS - வாசனைப்புல்
WILD ASPARAGUS - சதவலி
WINTER CHERRY - அமுக்கரா
WITHANIA SOMNIFERA - அமுக்கரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி
WOODFORDIA FRUTICOSA - வேலக்காய்
***
*X - வரிசை*
XYLIA AMERICANA - கலை, கடலிரஞ்சி
XYLIA XYLOCARPA - இருள்
***
*Y - வரிசை*
YELLOW SPIDER FLOWER - நாய்க்கடுகு
YLANG YLANG - மனோரஞ்சிதம்
***
*Z - வரிசை*
ZIZIPHUS JUJUBA - இலந்தை
ZIZIPHUS MAURITANIA - பல்லவப்பருனிச்செடி, முன்னதிமது
ZIZIPHUS NUMMULARIA - நரியிலந்தை, கொர்கொடி
ZIZIPHUS OENOPLIA - சூரைமுள்ளு
ZIZIPHUS RUGOSA - சூசை
ZIZIPHUS XYLOPHYRUS - முள்ளுத்துப்பை, கடல்சிரை
ZIZYPHUS RUGOSA LAM - துடரி
ZORNIA DIPHYLLA - சிறுபலதை