Thursday, August 28, 2014

மளிகை சாமான்களின் ஆங்கிலப் பெயர்கள்

சில நபர்களுக்கு மளிகை சாமான்களின் தமிழ்பெயர் தெரிந்திருக்கும் ஆங்கிலபெயர் தெரியாது. சில நபர்களுக்கு மளிகை சாமான்களின்ஆங்கில பெயர்கள் தெரிந்திருக்கும் தமிழ் பெயர் தெரியாது. அவர்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.
அவரை – Beans – பீன்ஸ்
இஞ்சி – Ginger – ஜின்ஜர்
உப்பு – Salt – ஸால்ட்
உளுந்து – Black Gram – பிளாக் கிராம்
பூண்டு – Garlic – கார்லிக்
எண்ணெய் – Oil – ஆயில்
ஏலக்காய் – Cardamom – கார்டாமாம்
கசகசா – Poppy – பாப்பி
கடலை – Bengal Gram – பெங்கால் கிராம்
கடுகு – Mustard – முஸ்டார்ட்
கம்பு – Millet – மில்லட்
கஸ்தூரி – Musk – மஸ்க்
குங்குமப்பூ – Saffron – சஃப்ரான்
கேழ்வரகு – Ragi – ராகி
கொள்ளு – Horse Gram – ஹார்ஸ் கிராம்
கோதுமை – Wheat – வீட்
சீரகம் – Cumin – குமின்
தனியா – Coriander – கோரியண்டர்
தயிர் – Curd – க்கார்ட்
துவரை – Red Gram – ரெட்கிராம்
கடலை எண்ணெய் – Gram Oil – கிராம் ஆயில்
தேங்காய் எண்ணெய் – Cocoanut Oil – கோக்கநட் ஆயில்
நல்லெண்ணெய் – Gingili Oil – ஜின்ஜிலி ஆயில்
நெய் – Ghee – கீ
நெல் – Paddy – பாடி
அரிசி – Rice – ரய்ஸ்
பச்சைப்பயறு – Green Gram – கீரின் கிராம்
பாசிப்பருப்பு – Moong Dal – மூனிங் தால்
கடலைப்பருப்பு – Gram Dal – கிராம் தால்
பன்னீர் – Rose Water – ரோஸ் வாட்டர்
பால் – Milk – மில்க்
பால்கட்டி – Cheese – ச்சீஸ்
புளி – Tamarind – டாமரிண்ட்
பெருங்காயம் – Asafoetida – அசஃபோய்டைடா
மக்காச்சோளம் – Maize – மெய்ஸ்
மஞ்சள் – Turmeric – டர்மரிக்
மிளகாய் – Chillies – சில்லிஸ்
மிளகு – Pepper – பெப்பர்
மோர் – Butter Milk – பட்டர் மில்க்
லவங்கம் – Cloves – க்லெளவ்ஸ்
வெங்காயம் – Onion – ஆனியன்
வெண்ணெய் – Butter – பட்டர்
வெல்லம் – Jaggery – ஜாக்கரீ
ஜாதிக்காய் – Nutmeg – நட்மெக்
ஜாதிபத்திரி – Mace – மெக்
வாற்கோதுமை – Barley – பார்லி
சர்க்கரை – Sugar – ஸுகர்
நன்றி :-http://manakkalayyampet.blogspot.in/

Wednesday, August 27, 2014

விந்து நட்டம் நூறும் அறுக்கும் வில்வம்" !!!


ஆngகிலப் பெயர்கள் : Bengal quince, golden apple, stone apple
தேரையர் பாதார்த்த குணசிந்தாமனியில் மருத்துவ பண்பை
“பல்லம் பூ பிஞ்சு பழம் இலை யாவும் முறையே
வல்வன் மேகம் மந்தமாம் குன்மம்
சொல்லுகின்ற நோக்கம் அருள்
விந்து நட்டம் நூறும் அறும்
அடுத்தவர்க்கு ஆக்கம் அருள்
வில்பத்திலாம” எனப் பாடியுள்ளார். இங்கு
1.“பல்லம் பூ பிஞ்சு பழம் இலை யாவும்”: இங்கு பல்வம் பூ பிஞசு பழம் என்பன வில்வமரத்தின் பல்வேறு பாகங்களைக் குறிப்பிடுகின்றார் பல்வம் என்பது இளம்தளிரைக் குறிப்பிடுகின்றார்.
2.“வல்வன் மேகம் மந்தமாம் குன்மம்”: இங்கு “மேகம்” என்னும் போது மதுமேகமான நீரழிவு நோயையே கருதுகின்றார். “மந்தமாம் குன்மம்” என்னும் போது வயிறிறில் வலி ,அஐPரணம் அல்லது ஐPரணக் கோளாறுகளைக் குறிக்கும்.
3.“சொல்லுகின்ற நோக்கம் அருள்”: என்ன என்ன வெல்லாம் நீங்கவேண்டும் எனநினைக்கின்றோமோ அதை எல்லாம் நீக்கி அல்லது என்ன என்ன வெல்லாம் வேண்டுமென்று அதை எல்லாம் வழங்கும் வல்லமை வில்வத்துக்குண்டு. எனக்குறிப்பிடுகின்றார்.
4. “விந்து நட்டம் நூறும் அறும்”: விந்துலான இந்திரியத்தில் எற்படக் கூடிய குறைபாடுகள் ஆண்மைக்குறைபாடுகள் உட்பட நூறு வகையுண்டு அவை அனைத்தையும் தீக்கவல்லது வில்வம். எனக்குறிப்பிடுகின்றார்.
5.“அடுத்தவர்க்கு ஆக்கம் அருள் வில்பத்திலாம்”: ஊக்கம் என்பது முயர்ச்சி ஆக்கம் என்பது செய்திறன் உடல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டமும் செயல்திறனும் அவசியம் இதனை வில்லம் தரும் என்று குறிப்பிடுகின்றார்.
வில்வத்தை நவீன அறிவியல் ஆராய்ந்து அதன் தன்மையை வெளியீடு செய்துள்ளது. வினோதினி, நாராயணண் என்னும் இரு ஆய்வாளர்கள் வில்வத்தை ஆராய்ந்து அது உடலில் உள்ள சக்கரை சத்தையும் கொளுப்புச் சத்தையும் தேவையான அளவுக்கு சீர் செய்து பராமரிக்கும் ஆற்றல் உடையது எனவும் வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றும் ஆற்றல் உண்டு என்றும் ஆய்வு செய்து வெளியீடு செய்துள்ளனர். வயிற்றினுள் அமிலத் தன்மையால் குடலில் ஏற்படும்; புண்களை ஆற்றுகின்ற ஆற்றல் வில்பத்தின் தளிர்களுக்கு உள்ளது.
வில்வ தளங்கள் சிவதலங்களில் அதிகளவில் பயன்படுத்துவதுண்டு. சிவன் பஞ்ச பூதங்களில் வாயுவுக்கு அதிபதி அது உஸ்ணத்துக்கு காரணமானது உஸ்னத்தை சீர் செய்து சமநிலையைப்பேன வில்வ தளம் பிரதானமானது. வில்வம் குளிர்மையானது. ஆத்துமா சூடான தன்மையுள்ளது. அதனாலேயே வில்வம் சிவபெருமானுக்கானது சிவாலயங்களிலே தீர்தமாக வில்வஇலை தீர்த்தம் கொடுக்ப்படுகின்றது.
பயன் படுத்தும் முறைகள்:
1. வில்வதளத்தினை நன்றாக சுத்தம் செய்து அதை செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் ஒன்பது இலை வரையில் ஒருமணிநேரம் ஊறவிட்டு காலையில் வெறுவயிற்றில் இலைகளை சப்பி விழுங்கி விட்டு அந்த நீரை அருந்திவர வெப்பத்தினால் விளையும் மேல் செப்பிய நோய்கள் அறும். இரவில் போட்டு காலையிலும் அருந்தலாம்.
2. வில்வதளங்களை நன்றாக மூன்று அல்லது நான்கு முறை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து சூரிய ஒளி நேரடியாகப்படாது இனலில் உலத்தி அரைத்து துணியில் கலித்து வஸ்திர காயமாகக் சூரணமாக்கி வெறு வயிற்றில் திருகடி பிரமாணமாக காலை மாலை பயன் படுத்தலாம்.
3.பூவை இனலில் உலர்த்தி உலர்ந்த பூவை நீர்விட்டுக காய்ச்சி தேனீர்; அருந்துவதை போல்அருந்தலாம்.
4.வில்வம் பழத்தை தேன் விட்டு விளாம் பழத்தைப் போன்று உண்ணமுடியும் இதனால் உடல் குளிர்ச்சியடையும்.

Sunday, August 24, 2014

மூக்கடைப்பு சரியாக...

ஓமம் (Carum roxburgianum)
ஓமத்தை இலேசாக வறுத்துப் பொடி செய்து 2 கிராம் எடுத்து அத்துடன் 1 கிராம் பச்சைக் கற்பூரம் சேர்த்து வெள்ளைத் துணியில் கட்டி நுகர, மூக்கடைப்பு, மூக்குநீர் பாய்தல், பீனிசம் ஆகியன தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!!!


பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!
* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.
* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.
* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.
* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.
* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.
* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.
* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.
* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.
* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்
* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.
* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.
* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.
* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.
* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.
* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.
* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.
* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.
* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.
* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.
* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.
நன்றி :-http://www.vivekabharathi.in/

17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை

1. இருமல்-சளி நீங்க
இருமல், சளி தொல்லை உள்ளவர்களுக்கு வெற்றிலை சிறந்த மரு ந்து. 2 வெற்றிலை, நடுநரம்பு நீக்கிய 5 ஆடாதொடா இலையுடன் 10 மிளகு, ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டு ம். அதனுடன் 300 மில்லி நீர்விட்டு மூடிய பாத்திரத் தில் நன்றாக கொதிக்க வைத்து 75 மில்லி ஆனவுட ன் வடிகட்டி குடிக்க வேண்டும். இதேபோல் தினமும் 2 அல்லது 3 வேளை சளி, இருமல் இருக்கும்வரை குடிக்கலாம். இப்படி செய்தால் உடனடி நிவார ணம் கிடைக்கும்.
2. ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி
சித்த மருந்துகடைகளில் கிடைக்கும் சுவாசகுடோரி மாத்திரை இர ண்டுடன் 2 மிளகும் சேர்த்து, அதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயில்போட்டு நன்கு மெல்லவேண்டும். தினம் 2 வேளை இவ்வாறு மென் றால் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி படிப்படியாக குணமாகு ம்.
3. காணாக்கடிக்கு
எந்த பூச்சி கடித்தது என்று தெரியாமல் ஏற்படும் பாதிப்பான காணாக் கடிக்கு நடுநரம்பு நீக்கிய வெற்றிலை 5, மிளகு 10 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து, 200 மில்லி நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக ஆனவுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வர காணாக்கடி விரைவில் குணமாகும்.
4. உற்சாக உணர்விற்கு
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு தூண்டப்படுகிறது. அத்துடன், ஒருவித உற்சாக உணர்வும் கிடைக்கி றது.
5. வாத நோய் நீங்க
வாத நோய்களை குணமாக்கும் “வாத நாராயணா” எண் ணெய் தயாரிப்பில் வெற்றிலை சாறும் ஒரு முக்கிய மூலப் பொருளாகும்.
6. தீப்புண் குணமாக
தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி புண்ணின்மீது பற்றாக போடவேண்டும். விரை வில் அந்த புண் குண மாகும்.
7. நுரையீரல் பலப்பட
வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற் றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந் து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.
8. வயிற்றுவலி நீங்க
2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரை த்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடு நரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக் கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மந்தம் குறையும்.
9. சர்க்கரையின் அளவு கட்டுப்பட
வெற்றிலை–4, வேப்பிலை – ஒரு கைப்பிடி , அருகம் புல் – ஒரு கை ப்பிடி. சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்றவை த்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.
10. விஷக்கடி குணமாக
உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமா ன வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றி லையில் நல்ல மிளகு வைத்துமென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.
11. இருமல் குறைய
வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பி ட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.
12. அஜீரணக் கோளாறு அகல
வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அத னுடன் 5 நல்ல மிளகுசேர்த்து நீர்விட்டு காய் ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந் தால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியா மை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழு ங்கி வந்தால் அஜீரணக் கோளா றுகள் நீங்கும்.
13. தோல் வியாதிக்கு
100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றி லையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்த வுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.
14. தலைவலி நீங்க
வெற்றிலைக்கு மயக்கத்தைப்போக்கும் குண முண்டு. மூன்று வெற்றிலைகளை எடு த்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன் றாக குழைத்து, நெற்றிப்பகுதியில் பற்று போ ட்டால் தலைவலி பறந்துபோகும்.
15. தீப்புண் ஆற
தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.
16. அல்சர்
அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலை யுடன் அத்தி இலை 1 கைப் பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையை ச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.
17. தேள் விஷம்
இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென் று விழுங்கி தேங்காய்துண்டுகள் சிலவற்றினை யும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறி யும்.

ஒரே வரியில் கீரைகளின் மருத்துவ குணங்கள் :-

1. அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.2. காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். சூடு தணிக்கும்.
3. சிறு பசலைக் கீரை சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குறைக்கும்.
4. பசலைக் கீரை தசைகளை பல மடையச் செய்யும்.
5. கொடி பசலைக் கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
6. மஞ்சள் கரிசலை கல்லீரலை பல மாக்கும். காமாலையை விலக்கும்.
7. குப்பை கீரை பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.
8. அரைக்கீரை ஆண்மை பெருக்கும்.
9. புளியங்கீரை சோகையை விலக்கும். கண் நோய் சரியாக்கும்.
10. பிண்ணாக்கு கீரை வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும்.
11. பரட்டைக் கீரை பித்தம், கபம், நோய்களை விலக்கும்.
12. பொன்னாங்கன்னி மேனி அழகையும், கண் ஒளியை அதிகரிக்கும்.
13. சீமைப்பொன்னாங்கன்னி மேனியை மினு மினுப்பாக்கும்.
14. சுக்கா கீரை ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். சிரங்கு மூலத்தை போக்கும்.
15. வெள்ளை கரிசலைக்கீரை ரத்த சோகையை நீக்கும்.
16. முருங்கைக் கீரை நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம் பெறும்.
17. வல்லாரை மூளைக்கு பலம் தரும்.
18. முடக்கத்தான் கீரை கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.
19. புண்ணக் கீரை சிரங்கும், சீதளமும் விலக்கும்.
20. புதினாக் கீரை ரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம் அகற்றும்.
21. நஞ்சு முண்டான் கீரை விஷம் முறிக்கும்.
22. தும்பை அசதி, சோம்பல் நீக்கும்.
23. கல்யாண முருங்கை கீரை சளி, இருமலை துளைத்தெறியும்.
24. முள்ளங்கிகீரை நீரடைப்பு நீக்கும்.
25. பருப்பு கீரை பித்தம் விலக்கும். உடல் சூட்டை தணிக்கும்.
26. புளிச்ச கீரை கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.
27. மணலிக்கீரை வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்.
28. மணத்தக்காளி கீரை வாய், வயிற்றுப்புண் குணமாக்கும். தேமல் அகலும்.
29. முளைக் கீரை பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்.
30. சக்கரவர்த்தி கீரை தாது விருத்தியாகும்.
31. வெந்தயக் கீரை மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
32. தூதுவளை ஆண்மை தரும் சரும நோய் விலக்கும். சளி நீக்கும்.
33. தவசிக் கீரை இருமலை போக்கும்.
34. சாணக் கீரை காயம் ஆற்றும்.
35. வெள்ளைக் கீரை தாய்ப்பாலை பெருக்கும்.
36. விழுதிக் கீரை பசியைத் தூண்டும்.
37. கொடி காசினி பித்தம் தணிக்கும்.
38. வேலைக் கீரை தலைவலியை போக்கும்.
39. துயிளிக் கீரை வெள்ளை வெட்டை விலக்கும்.
40. துத்திக் கீரை வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
41. கார கொட்டிக்கீரை மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
42. மூக்கு தட்டை கீரை சளியை அகற்றும்.
43. நருதாளி கீரை ஆண்மையை பெருக்கும். வாய்ப்புண் அகற்றும்.
மேலே குறிப்பிட்ட சில கீரை வகைகளில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் உடலுக்கு சிறு தீங்கு விளைவிப்பவைக்கு உதாரணம்,
44. அகத்தி கீரை மருந்து சக்தியை முறியடிக்கும்.
45. பிண்ணாக்கு கீரை வாத கரப்பான் வரும்.

முதுகு வலியும்- இயற்கை மருத்துவமும்:-

இடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும்.
நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் – இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த “இழுப்பு” ஏற்படுகிறது.
சியாடிக்கா என்றால் என்ன?
நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும்.
முழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும்.
அறிகுறிகள்
‘சியாடிகா’ உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம்.
இல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனது போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது.
காரணங்கள்:
• முதுகெலும்பு கோளாறுகள் இடுப்புப் பிடிப்பை தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும்.
இதனால் ஸியாடிகா ஏற்படும். இதர முதுகெலும்பு கோளாறுகளும் காரணங்கள். அதிக எடை தூக்குதல் நடப்பது, ஓடுவது, மாடிப்படிகள் ஏறுவது, இவை வலியை அதிகமாக்கும்.
• ஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்பு பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம்.
• சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும்.
• ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவைகளையும் காரணமாக சொல்லலாம்.
வீட்டு வைத்தியம்:
• விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.
• பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.
• புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.
• சூடான நல்லெண்ணை + உப்பு – மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.
• விளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணை 1 தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி – இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.
• ‘வெண்நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 தேக்கரண்டி வீதம், எடுத்துக் கொள்ளவும்.
ஆயுர்வேத அனுபவம்
முதுகு வலி வந்தால், கூடவே இடுப்புப் பிடிப்பும் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவர்கள் அறிந்த அனுபவம். அதனால் முதுகு வலி சிகிச்சையுடன் இடுப்பு பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.
இடுப்பு வலிக்கு, ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பலனை தருகின்றன.
முன்னால் சொல்லப்பட்ட ஆயுர்வேத மருந்துகளும் நல்ல நிவாரணம் தருபவை.
மருந்துகளுடன் ‘வஸ்தி’ எனப்படும் எனிமா சிகிச்சை இடுப்பு வலியை இல்லாமல் செய்யக்கூடியது.
ஒரு நாள் எண்ணெய்யை உபயோகித்தும் மறுநாள் கஷாயத்துடனும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு பிழிச்சல், கடி வஸ்தி சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முதுகில் வலி இருக்கும் இடத்தில் உளுந்து மாவினால் வட்டமாக அமைத்து அதில் மூலிகை எண்ணெய் ஊற்றி செய்யும் சிகிச்சை தான் கடிவஸ்தி.
உணவு கட்டுபாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.
இதர வழிகள்:
1. முன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.
2. குப்புற படுக்கக் கூடாது.
3. நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும் இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.
4. நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.
5. உங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.
6. இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.
7. ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.
8. ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.
9. படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.
10. நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
11. பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.
12. தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.
13. தரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின்னர் தூக்குங்கள்.
14. கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் அது முதுகு வலியில் போய் முடியலாம்.
15. உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.
16. பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
17. முதுகுவலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.
18. பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் மலச்சிக்கல். இதை தவிர்க்கவும்.
உணவு முறை:
• குளிர் உணவு / பானங்களை தவிர்க்கவும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை தவிர்க்கவும்.
• பழைய உணவுகளை தவிர்க்கவும்.
• கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் – இவற்றை தவிர்க்கவும்.
• எள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும்.
• இரண்டு தேக்கரண்டி சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
• இரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலை பருகவும்.
• இயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியை குறைக்கும்.
• இஞ்சியும், மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்.

வாழை இலைக்குளியல்!!!

உலகில் உள்ள அனைத்து தாவரங்களும், மரங்களும் கரியமிலா வாயுவை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியே விடுகிறது. மனிதர்கள் ஆக்ஸிஜனை சுவாசித்து கரியமிலா வாயுவை வெளியே விடுகிறார்கள்.
அதாவது மனிதனின் வெளிமூச்சு தாவரங்களுக்கு உள்மூச்சு. தாவரங்களின் வெளிமூச்சு மனிதர்களுக்கு உள்மூச்சு.
உயிரினங்கள் இல்லாவிட்டால் மரம், செடிகளும் மரம் செடிகள் இல்லாவிட்டால் மற்ற உயிரினங்களும் உலகில் ஆரோக்கியமாக
வாழ முடியாது.
இதுவே
இறைநிலையின் ஏற்பாடு.!
அதிலும் மற்ற தாவரங்கள் ஆக்ஸிஜனை மட்டுமே வெளிவிடுகிறது
அதில் பிராணக்காற்றும்
கலந்துள்ளது.ஆனால், வாழையிலை மட்டுமே கரியமிலா வாயுவை உட்கொண்டு சுத்தமான பிராணவாயுவை மட்டுமே வெளிவிடுகிறது
மற்ற தாவரங்களிலிருந்து பெறப்படும் ஆக்ஸிஜனில் இருப்பதை விட
பலமடங்கு பிராணசக்தி வாழையிலையில் நிறைந்துள்ளது.
அதனால்தான்
உடலில் பல்வேறு வழிகளில் தேங்கியுள்ள கரியமிலா வாய்வை வெளியேற்றி உடலில் உள்ள கெட்ட காற்றையும் நீரையும் வெளியேற்ற வாழையிலை குளியல் ஒரு உபாயமாக இருக்கிறது.
*பலன்கள்
————
1.உடல் எடையை குறைக்கும்.
2.உடல் வீக்கம், கை, கால்வீக்கத்தைப்போக்கும்.
3. சிறுநீரக செயலிழப்பை தடுக்கும்.
4.அலர்ஜி, மற்றும் தோல்வியாதி
களைப்போக்கும்.
5.வியர்வை சுரபிகளில் ஏற்பட்டுள்ள தடையை போக்கும்.
6.உடலில் பல்வேறு உறுப்புகளில் தேங்கியுள்ள கெட்ட காற்றை வெளியேற்றும்.
7. உடலுக்கு புத்துணர்வை
யும், புதுப்பொலிவையும் தரும்.
8. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
9.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்பட்டுள்ள மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.
*செய்முறை
—————–
1.வாழை குளியலுக்கு முதல் நாள் நிறைய நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளை பச்சையாக உண்ணவேண்டும்.
2.குளியல் செய்ய
போகும் இடத்தில்
ஆறு துண்டு நூல்கயிறு அல்லது தென்னை கயிறை வரிசையாக
தரையில் போடவும்.
3.அதன்மேல் நான்கு பெரிய இலைகளை விரிக்கவும்
< உடல் பருமனுக்கு தகுந்தபடி>
4.வாழை குளியல் எடுப்பவருக்கு ஆறுடம்ளர் தண்ணீர் கொடுத்து, தலையில் ஒரு டவ்வலை நனைத்து சுற்றி இலைகளில் படுக்க வைக்கவும்.
5.கால் பாதம் முதல் உச்சந்தலை
வரை உடலில் எந்த பாகமும் வெளியே தெரியாதபடி அவரின் மேலே இலைகளால் மூடவும்.
6.மூக்கின் அருகே மூச்சு விடுவதற்காக இலையின் சிறு பகுதியை வெட்டிவிடவும்.
7.இலைகட்டு
களை கட்டுவதுபோல் அவர் உடல் முழுவதையும் போர்த்தி சற்று மெல்லிய இறுக்கத்துடன் கட்டிவிடவும்.
அப்படியே 20 முதல் 30 நிமிடங்கள் வரை படுத்திருக்க செய்துவிட்டு கட்டுகளை அவிழ்த்து மூன்று முறை நன்றாக மூச்சை இழுத்துவிட செய்து எழுப்பி நிழலில் அமர்த்தி. எலுமிச்சை , தேன் , இந்துப்பு , இஞ்சி கலந்த கலவையை கொஞ்சம் மெதுவாக நன்றாக கொப்பளித்து குடிக்க செய்துவிட்டு பிறகு 15 நிமிடம் கழித்து பச்சைதண்ணீரில் குளிக்க செய்து
விடலாம்.
அதன்பிறகு அன்றைக்கு முழுவதும் இயற்கை உணவு அல்லது சாத்வீக உணவுகளையே உண்ண வேண்டும்.
10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்
வாழையிலை குளியல் எடுத்துக்கொள்ளலாம். வாழை குளியல் செய்ய காலை
ஏழு மணி முதல் பதினோரு மணிவரை உள்ள நேரமே சிறந்ததாகும்.
வாழைகுளியலின்போது
இருபது நிமிடத்திற்குள்ளாகவே வெப்பம் அதிகமாக உணரப்பட்டால் வாழையின் மேலே கொஞ்சம் நீரை தெளித்துகொள்ளலாம்.
இலையின் உள்ளிருப்பவர் பொறுக்க முடியாத அளவு சிரமமாக உணர்ந்தால் அவரை வெளியேற்றி விடலாம்.
குளியலின் போது வெறும்
டவ்வல் அல்லது ஜட்டியை மட்டுமே அணிந்து கொள்ளலாம்.
பெண்கள் குறைந்த பட்ச பருத்தி ஆடைகளை அணிந்து
கொள்ளலாம்.
இயற்கையின் ஆற்றல் அளவிட முடியாதது நண்பர்களே அதை முழுவதுமாக பயண்படுத்தி
கொண்டு. கெட்ட
பின் விளைவுகளை
தரும் மருத்துவ முறைகளை முற்றிலும் தவிர்த்து, வெளிநாட்டு இரசாயண மருந்துகளின் குப்பைத் தொட்டியாக
நம் உடலை ஆக்காமல் இறை உறையும் ஆலயமாக அதை மாற்றுவது நமது கைகளில் தான்
இருக்கிறது.!
இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்வோம்.!

மூட்டுவலி, உடல்வலி, கை, கால் வீக்கம், நெஞ்சுச்சளி போன்ற பிணிகளுக்கு !!!

நல்லெண்ணெய் 200 மிலி
விளக்கெண்ணைய் 100 மிலி
வேப்பெண்ணைய் 50 மிலி
இந்த மூன்று எண்ணைய்களையும் வாங்கி ஒன்றாகச்சேர்த்து அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எருக்கன் இலை நான்கை பிச்சுப்போட்டு இலை வெந்ததும் எண்ணையை இறக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு மூட்டுவலி, உடல்வலி, கை, கால் வீக்கம், நெஞ்சுச்சளி போன்ற பிணிகளுக்கு பாதிப்புள்ள இடத்தில் கொஞ்சம் அழுத்தமாக தடவி அரைமணி நேரம்
கழித்து சுடுநீரில் ஒத்தடம் கொடுத்து வர மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும்.
உள் மருந்தாக திரிபலா சூரணம் 5 கிராம் எடுத்து சிறிது தேனில் குழைத்து இரவு தூங்கும்முன் உண்டு வந்தால் மேற்கண்ட பிணிகள் தீர்ந்துவிடும்.!

டான்சில் வீகத்திற்கு இயற்கை மருத்துவம்!!!



டாங்சில்ஸ் வீக்கம்
----------
சுக்கு 10 கிராம்
மிளகு 10 கிராம்
திப்பிலி 10 கிராம்
நெல்லிவற்றல் 10 கிராம்
தான்றிவற்றல் 10 கிராம்
மேற்கண்ட மூலிகைகளை வாங்கி தனித்தனியாகப் பொடித்து பின் ஒன்றாக கலந்து
100 கிராம் கற்பூரவல்லி இலையை சிதைத்து சாறெடுத்து அதோடு மூலிகைப் பொருட்களை சேர்த்து அம்மி அல்லது மருந்து தயாரிக்கும் கல்லில் வைத்து நன்றாக அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் நான்குநாட்கள் காயவைத்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிட்டு அரைமணி நேரம் சென்ற பின் வேளைக்கு ஒன்றுவிதம் மூன்று வேளையும் வாயில் போட்டு ஒதுக்கிக்கொண்டு உமிழ் நீரோடு சேர்த்து மெதுவாக உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு காலை, இரவு தேனில் மாத்திரையை பொடித்து கலந்துகொடுக்கலாம்.! டாங்சில்ஸ் வீக்கம்.தொண்டைவலி, குரல்கட்டி, சளி, ஜலதோசம், வறட்டு இருமல் ஆகிய பிணிகள் குணமாகும்.
டாங்சில்ஸ் என்பது தொண்டைவீக்கம் தான் ஆனால் அது சதைவளர்ச்சி என்றுகூறி வர்த்தக மருத்துவத்தில் அறுவைசிகிட்சை செய்ய கூறுவது தவறாகும்.
உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாக சேர்க்க வேண்டும்.
புளித்த, பழைய அதிக குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நலம் பெருகட்டும் …

குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!

மழைக்காலம் வந்தாலே சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படும். திடீரென்று ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் குழந்தைகள்தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மூக்கில் தண்ணீர் வடிவதால் முகமெல்லாம் சிவந்து எரிச்சலடைவார்கள். இந்த தொந்தரவுகளை நீக்குவதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மருந்துகளை கொடுக்கலாம் என்கின்றனர் குழந்தைநல நிபுணர்கள்.
சளி தொந்தரவு ஏற்பட்டாலே குழந்தைகளுக்கு மூக்கு அடைத்துக் கொள்ளும். ஒரு துண்டு சுக்கு எடுத்து தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மாலையிலும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் மூக்கடைப்பு விரைவில் நீங்கும். துளசிச்சாறு, இஞ்சி, தேன் சம அளவு கலந்து குடிக்கத் தரலாம் ஜலதோஷம் நீங்கும். அதேபோல் மூலிகை டீ குடிக்கக் கொடுக்கலாம்.
டீ போடும்போது இஞ்சியைத் தூளாக்கி போட்டுக் கொதிக்க வைத்து குடித்தால் ஜலதோசம் சரியாகும்.
பட்டை, கிராம்பு, பெரிய ஏலக்காய், இஞ்சி, வெற்றிலை ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் பனங்கற்கண்டு கலந்து குடிக்கத் தரலாம். கலந்தோ குடித்தால் சளித்தொல்லை நீங்கும்.
குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இருமல் வந்தால் ஓமவள்ளி, வெற்றிலை, துளசி, இஞ்சி இவற்றின் சாறு எடுத்து தேன் கலந்து குடிக்கத் தரலாம். இதனால் மார்பில் கட்டி இருக்கும் சளி பிரிந்து வெளிவரும். குழந்தைகளுக்கு நெஞ்சுச்சளி அதிகம் இருந்தால் தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
ஒரு சில குழந்தைகள் இரவு நேரங்களில் வறட்டு இருமல் இருமி தூங்காமல் முழித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு கற்பூரவல்லி இலையை அரைத்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு குடிக்கத் தரலாம் நல்ல பலன் உண்டாகும். மேலும் காசநோய், வாதக் கடுப்பு போன்ற நோய்களுக்கும் இதன் சாறு மிகவும் நல்லதாகும்.
வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும். வெந்தயக் கீரையை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொண்டால் சளி சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். இரும்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளது.
நன்றி :-http://pvsmms.blogspot.in

குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!

மழைக்காலம் வந்தாலே சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படும். திடீரென்று ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் குழந்தைகள்தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மூக்கில் தண்ணீர் வடிவதால் முகமெல்லாம் சிவந்து எரிச்சலடைவார்கள். இந்த தொந்தரவுகளை நீக்குவதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மருந்துகளை கொடுக்கலாம் என்கின்றனர் குழந்தைநல நிபுணர்கள்.

சளி தொந்தரவு ஏற்பட்டாலே குழந்தைகளுக்கு மூக்கு அடைத்துக் கொள்ளும். ஒரு துண்டு சுக்கு எடுத்து தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மாலையிலும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் மூக்கடைப்பு விரைவில் நீங்கும். துளசிச்சாறு, இஞ்சி, தேன் சம அளவு கலந்து குடிக்கத் தரலாம் ஜலதோஷம் நீங்கும். அதேபோல் மூலிகை டீ குடிக்கக் கொடுக்கலாம்.
டீ போடும்போது இஞ்சியைத் தூளாக்கி போட்டுக் கொதிக்க வைத்து குடித்தால் ஜலதோசம் சரியாகும்.

பட்டை, கிராம்பு, பெரிய ஏலக்காய், இஞ்சி, வெற்றிலை ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் பனங்கற்கண்டு கலந்து குடிக்கத் தரலாம். கலந்தோ குடித்தால் சளித்தொல்லை நீங்கும்.
குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இருமல் வந்தால் ஓமவள்ளி, வெற்றிலை, துளசி, இஞ்சி இவற்றின் சாறு எடுத்து தேன் கலந்து குடிக்கத் தரலாம். இதனால் மார்பில் கட்டி இருக்கும் சளி பிரிந்து வெளிவரும். குழந்தைகளுக்கு நெஞ்சுச்சளி அதிகம் இருந்தால் தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

ஒரு சில குழந்தைகள் இரவு நேரங்களில் வறட்டு இருமல் இருமி தூங்காமல் முழித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு கற்பூரவல்லி இலையை அரைத்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு குடிக்கத் தரலாம் நல்ல பலன் உண்டாகும். மேலும் காசநோய், வாதக் கடுப்பு போன்ற நோய்களுக்கும் இதன் சாறு மிகவும் நல்லதாகும்.
வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும். வெந்தயக் கீரையை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொண்டால் சளி சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். இரும்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளது.
நன்றி :-http://pvsmms.blogspot.in

தைராய்டு தொல்லையால் அவஸ்தை படுவோருக்கு சில ஆலோசனைகள்…


எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் லதா. அவர் கூறியதாவது:
தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உண விலும் கட்டுப்பாட்டைக் கடைபி டிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும்.
தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம்.
உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
பாதுகாப்பு முறை: தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.
உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.
டயட்
உடலில் அயோ டின் அளவு குறைந் தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்னை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம். தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றும். அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்னைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.
தைராய்டு பிரச்னை யை பொருத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண் டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட் களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம். தைராய்டு அளவு அதிகம் உள்ளவர் கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண் டிப்பாக தவிர்க்க வேண்டும்.
உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்‘ என்கிறார் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமை ஆகும்.
ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
நன்றி :-http://pvsmms.blogspot.in

புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுதலை வேண்டுமா?

 மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை; புகை பிடிப்பவர்களை அதன் பாதிப்பில் இருந்தும் அந்த பழக்கத்தில் இருந்தும் காப்பாற்றும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.
மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்து கிறது, இது சீனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்த நாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை.
இந்த மருத்துவத்தை தலைவன் (master) பெங்க் மும்பை வந்த போது எனக்கு சொன்னது, நான் பலரிடம் சொல்லி அதற்கான பலனும் பார்த்திருக்கிறேன், இதை நீங்களும் உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க உடனிருங்கள்.